சென்னை: சட்டசபையில் எவ்வாறு செ யல்பட வேண்டும் என்பது குறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுடன், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.செ ன்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன், அனகை முருகேசன், அருண் சுப்பிரமணியன், பண்ருட்டி சிவக்கொழுந்து ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கலந்துக் கொள்ளவில்லை.சொந்த அலுவல் காரணமாக இவர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழழகன், சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் பங்கேற்கவில்லை. மற்ற, 20 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில் பேசுவதற்கு, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.
குறைந்த நாட்களில் இந்த கூட்டத்தொடர் நடப்பதால், அனைவரும் பேச முடியாது. எனவே, இந்த கூட்டத் தொடரில் பேசுவதற்கு, பார்த்திபன், வெங்கடேசன், சந்திரக்குமார் ஆகிய மூன்று பேரை நானே தேர்வு செய்துள்ளேன்.பட்ஜெட் கூட்டத்தொடரில், மற்ற, எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும். விவசாயிகளுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்தும், மின்வெட்டால் தொழில்கள் பாதித்துள்ளது குறித்தும் கவர்னர் உரையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, இப்பிரச்னையை, இந்த மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், பிரதானமாக எழுப்புவர். வேறு என்னென்ன பேசவேண்டும் என, மற்ற எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்க்கின்றீர்களோ, அதை அவர்கள் மூவரிடமும், பகிர்ந்துக்கொள்ளுங்கள். இது குறித்து இங்கேயே அமர்ந்து விவாதித்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த்,இன்று முடிவு :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Enna pudhu கமெடி கேப்டன், இப்போ என்ன அறிவுரை குடுக்கபோறீங்க. குடியும் குடுதினமும் பற்றி பேச சொல்லி குடுக்க போறீங்க. அதுல நீங்க தான் எச்பெர்ட் ஆச்சே. ஏன் யா ஒரு நாள் குடிக்காம நிதானமா யோசிச்சு பாரு, அப்போ புரியும் நீ எவ்வளவு லக்கி லைப் ல நு. இல்லேன்னா நீ எல்லாம் பொது வாழ்கைல வரமுடியுமா. நேராம் தான் ஔர் டியர் பாட்டில் கேப்டன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.