சென்னை:மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மற்றும் நீதிமன்றங்கள் செயல்படும், சிங்கார வேலர் மாளிகையில், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசாருக்கு பாதுகாப்பு
இல்லாததுடன், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால், அங்கு பணியாற்றும் பெண் காவலர்கள், அச்சத்துடனேயே பணியாற்றுகின்றனர்.
ராஜாஜி சாலையில் உள்ளது, சிங்கார வேலர் மாளிகை. இங்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள்
உள்ளிட்ட, பல்வேறு அரசுத்துறை
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எட்டடுக்கு கொண்ட மாளிகையின் பாதுகாப்புக்காக, ஆயுதப்படை பிரிவில் உள்ள, 13 பெண் போலீசார், அங்கேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், ஏழாவது மாடியில், நான்கு பெண் போலீசாரும், மூன்றாவது, இரண்டாவது மற்றும் முதல் மாடியில், தலா மூன்று பேர் வீதம், மொத்தம், 13 பேர், பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களுக்கான தங்கும் வசதிக்கான
ஏற்பாடுகள் படுமோசமாக உள்ளன.
குறிப்பாக, இரண்டாவது மாடியில், 15, 16, 17 மற்றும் 19வது மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் உள்ளன. இங்குள்ள கோப்புகளை பாதுகாக்கும் வகையில், மூன்று பேர் அங்கேயே தங்கி உள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள், அங்கு, சுத்தமாக இல்லை. பலகைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும், கட்சி பேனர்களை கொண்டு திரை மறைவு ஏற்படுத்தியும் உள்ளனர்.
அந்த இடத்திலேயே தூங்கியும், ஆடைகளை மாற்றியும் பெண் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை உபாதைகளுக்கு, இடத்தை தேடித் திரிய வேண்டியுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் எடுத்துரைத்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.