சென்னை :"தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதாக அளித்த உறுதிமொழியை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீறி விட்டதால், அவருக்கு, மத்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கை தீவின், 65வது விடுதலை நாள் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசுகையில், "தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது. நாட்டை இன ரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது' என்று தெரிவித்துள்ளார்.மேலும், அவர் தனது உரையில், இன வேறுபாடுகளைப் பற்றியும், மத வேறுபாடுகளைப் பற்றியும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் உன்னத கலாசாரத்தைப் பற்றியும், இந்த பூனையும் பால் குடிக்குமா என, கேட்குமளவுக்குப் பேசியிருக்கிறார்.
ஒரே மொழி, ஒரே மதம் என, இலங்கை நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில், செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்த, சர்வதேச குற்றவாளியாக, உலக நாடுகள் பார்க்கின்றன. தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதாக, இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும், நீண்ட காலமாக அளித்து வந்த உறுதிமொழியை, இப்போது செய்திருக்கும் அறிவிப்பின் மூலமாக மீறியிருக்கிறார். அவருக்கு உலகமெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் தானே தலைவா ..சிங்களர்களுக்கு ஆத்திரம் ஏற்படாதவகையில் இங்குள்ள தமிழர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றீர்கள் ...இன்னொரு நாட்டின் இறையாண்மையின் நம்மால் அழுத்தம் கொடுக்க முடியாது என்றீர்கள் , நாங்களே ஒரு அடிமை ...எனவே இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது என்றீர்கள் ...நாற்பது ஆண்டுகால இலங்கை தமிழர் பிரச்சனையை நன்கு நாளில் தீர்கமுடியது என்றீர்கள் ...ஆயிற்றக்கனக்கில் சிங்கள ராணுவம் ஈழ தமிழர்களை அழித்துக்கொண்டு இருக்கும்போதே போர் நின்று விட்டதென்று பிதற்றிநீர்கள் ...சிங்கள விமானம் கிபீர் குண்டுகளை வீசியதை மழை தூவானம் என்றீர்கள் ..உங்கள் மகள் கனிமொழி ராஜபக்சேவுடன் விருந்து அருந்திவிட்டு, அவன் கொடுத்த சூட்கேஸ் நிறைய பரிசு பொருட்களை வாங்கி மகிழ்ந்தீர்கள் ..ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் போராடியவர்களுக்கு நீங்கள் முதல்வராக இருந்து கொடுத்த தொல்லைகள் மறக்க கூடியதா ...ஈழதமிழர் கொத்து கொத்தாக இறைந்தபோது நீங்கள் இங்கே உண்ணாவிரத நாடகம் ,எம்பிக்கள் ராஜினாமா நாடகம் , உடல் நிலை சரியில்லையென்று நாடகம் ஆடினீர்கள் ...தமிழ் மூதாட்டி பார்வதி அம்மாள் தமிழ் நாட்டிற்கு உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக வந்தபோது ..கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத அரக்கனாக அவர்களை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை எந்த தமிழனாவது மறப்பனா ? ...தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டு கொன்றதை ,,சில பேராசை பிடித்த மீனவர்கள் எல்லை தண்டி மீன்பிடிப்பதால் சிங்கள கடற்படை சுட்டு கொல்கிறது என்றீர்கள் ...நீங்கள் தமிழ் நாட்டின் முதல்வராய் இருந்தபோது ..பதவி கண்ணை மறைத்து விட்டது ..தேர்தலில் நங்கள் உங்கள் கட்சிக்கு ஆப்பு வைத்தவுடன் ..ஈழ தமிழர்கள் மேல் உங்களுக்கு பாசம் பொத்துக்கொண்டு வருகிறது ...உங்கள் இந்த நடிப்பை பாராட்டி சிறந்த நடிகருக்கான விருதை உங்களுக்கு தரலாம் ...ஆனால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஈழ தமிழர் ..கண்ணீரில் உங்கள் அரசியல் பிழைப்பை நடத்த வேண்டுமா ? ...தமிழன எதிரி ராஜபக்சே என்றால் ..நீங்கள் யார் ?
இருந்த போது எதுவும் செய்யவில்லை. பதவி போனபின் பொழுதுபோக்கு அறிக்கை. திரு அல்போன்சே அவர்களே மஞ்சள் துண்டு தள்ளுவண்டி இதுவரை எழுபியது என்னவென்று கூகுல்லில் ''karunanithi properties '' என்று தட்டி எழுப்பி பாருங்கள். நீங்கள் எலும்பிவிடுவீர்கள்.தலாய் லாமா ஒரு புத்த துறவி குஞ்சு ''அவர்களே தயவு செய்து இந்த சாக்கடையை சந்தனத்துடன் ஒப்பிடாதீர்கள்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.