"காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில், விரைந்து வெளியிட வேண்டும்' என, மத்திய, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், டில்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஹரிஷ் ராவத்தை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, இனியும் கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும், விரைவில் வெளியிட, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். அதே போல், சட்ட அமைச்சர், அஸ்வினி குமாரையும் சந்தித்து, இதே கருத்தை, அமைச்சர் வாசன் வலியுறுத்தினார்.
- நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.