பவானி: ஈரோடு மாவட்டத்தில் பவானி யூனியன் அரசு அறிவித்த மக்கள் திட்ட பணிகளை சிறப்பான முறையில் செய்தமைக்காக, 14 யூனியன்களில் முதலிடம் பெற்றது.
கடந்த, 2012-13ம் ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்த பல்வேறு திட்டங்களான இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், கிராம தன்னிறைவு திட்டம், பசுமை வீடுகள் திட்டம், எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, தேசிய வேலை உறுதித்திட்டம், மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு, ஊரக கட்டமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியதில் ஈரோடு மாவட்ட அளவில் பவானி யூனியன் சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.
திட்ட செயல்பாட்டில் சிறப்பாக வழங்கியமைக்காக, பவானி யூனியன், மாவட்ட அளவில் சிறந்த யூனியனாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக, நடந்து முடிந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் சண்முகம் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்களான சிவசண்முகம், மாரப்பன் மற்றும் பொறியாளர்களான கே.முருகேசன், வி.முருகேசன் ஆகியோர்களிடம் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக, யூனியன் ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும், யூனியன் தலைவர் தங்கவேலு, துணைத்தலைவர் ரவி, கவுன்சிலர்கள் முருகன், சீனிவாசன், ராஜாமணி, சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.