வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் நடைபெறும் பனிப்போரால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை எழுந்துள்ளது.வேடசந்தூர் கொல்லப்பட்டறைஅருகே மூன்று ரோடுகள் பிரிகின்றன. மேலும் கோவிலூர் ரோடு வளைவும் உள்ளது. இந்த இடத்தில் இருந்த கழிப்பறையை இடித்து புதிய கழிப்பறையை பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 3. 50 லட்சம் செலவில் கட்டி வருகிறது.
பழைய கழிப்பறை தென் வடலில் இருந்தது. இதனால் ரோட்டு பகுதி ஆக்கிரமிப்பு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கிழக்கு மேற்காக பழைய அளவை விட கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டில் வளைவில் திரும்பும் போது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,""தென்வடலில் இருக்கும் போது பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது கட்டப்படும் கட்டடத்தால், ரோட்டின் அளவு குறைந்துள்ளது. எங்களிடம் புதிதாக கட்டடம் கட்ட அனுமதி பெறவில்லை. ஆக்கிரமிப்பு எடுப்பது குறித்து புகார் அனுப்பியுள்ளோம்,'' என்றனர்.பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெறப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. தற்போது இதனை இடித்து விட்டு கூடுதலாக கட்டி வருகிறோம். இப்பகுதி பெண்களுக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.