திருச்சி: தி.மு.க.,வுடன் விஜயகாந்த் நெருங்குவது பொறுக்கவில்லையா என நிருபர்களிடம் கருணாநிதி எரிச்சலுடன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்னையில் தி.மு.க., தொடர்ந்து பார்லிமென்ட்டிலும், மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வருமா என்று எனக்குத் தெரியாது. முலாயம் சிங்கின் கருத்து வெறும் யூகமே. எனக்கு யூகமும் இல்லை; வியூகமும் இல்லை. செயற்குழு, பொதுக்குழு கூடி இது குறித்து முடிவு செய்யும். "நானே எல்லாம்" என்ற வகையில் செயல்படும் இந்த அரசில் அனைத்து கட்சிக் கூட்டத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. விஜயகாந்த் என்னைச் சந்திக்க இருக்கிறார் என்று நீங்கள் கூறித்தான் தெரியும். தி.மு.க.,வுடன் விஜயகாந்த் இணக்கமாக இருக்க விரும்புகிறார் என்றால் அது உங்களுக்குப் பொறுக்காதே.
ராஜபக்ஷேயின் இந்திய வருகை குறித்து மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்டாலின் தலைமையிலான குழு டில்லி சென்றது, டெசோ தீர்மானங்கள் தொடர்பாக வெளிநாட்டுத் தூத்ர்களைச் சந்திக்கத்தான்; இதை பத்திரிகைகள்தான் திசை திருப்பி வேறு மாதிரியான செய்திகளை வெளியிட்டுள்ளன. மத்திய அமைச்சர் அழகிரி மீது குறை கூறும் முதல்வர் ஜெயலலிதா, முதலில் தனது சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்கட்டும். தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கெல்லாம் கருத்து கூறுவதில் பயன் இல்லை; அதைக் கேட்டு தங்களைத் திருத்திக் கொள்ளும் பண்பு அவர்களிடம் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அய்யா பெரியவரே உம்முடைய பேச்சை யாரும் கேட்பதும் இல்லை, கேட்க போவதும் இல்லை. ஏன் வீணாக பத்திரிகையாளரிடம் ஆத்திரப்படுகிரீர் ? போதும் உங்கள் குடும்பத்துக்காக சேர்த்து வைத்தது. இன்னுமா பதவி ஆசையும் பொருள் ஆசையும் அடங்கவில்லை. விஜயகாந்த் தனியாக நின்று அல்லது வேறு யாருடனாவது கூட்டணி வைத்து ஜெயிதுவிட்டு போகட்டும். திமுக உடன் சேர்ந்தால் அவர்களுக்கு இப்போது இருப்பதும் போய்விடும். சோனியாவிடமே தொடர்ந்து மண்டியிட்டு மன்றாடிபாருங்கள் காங்கிரஸ்-இல் தொடர்வதற்கு..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.