கோல்கட்டா: தனது பாதுகாவலர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என ஆவேசமாக மம்தா எச்சரித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்கட்டாவில் நடந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, திரும்பிச் செல்லும் போது தனது கார் வர தாமதமானதால் ஆத்திரமடைந்தார். உடனே அவரது பாதுகாவலர்களை நோக்கி, "நீங்கள் எல்லாம் என்ன செய்றீங்க. உங்களை எல்லாம் சாட்டையால் அடிக்க வேண்டும். அப்போது தான் திருந்துவீர்கள்" என்று ஆவேசமாக தெரிவித்தார். பலர் மத்தியில் ஒரு மாநில முதல்வர் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மம்தா அவர்கள் சில வேளை தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசிவிடுகிறார்கள். மிக வேகமாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது பின்பு வேறு ஒரு பிரச்சினைக்கு துணிவான கருத்தை வெளியிட்டாலும் மேற்கண்ட செயல்பாடுகள் நீர்த்துப் போக பண்ணும். ஆதலால் பொறுப்பான பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் கூறும் கருத்துக்களை சிந்தித்து பேசுவது நல்லது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.