பழநி: பழநி அருகே ஆயக்குடி குளத்தில் திருட்டுத்தனமாக மாட்டுவண்டி, டிராக்டர்களில் மணல் அள்ளுகின்றனர். மழையில்லாததால் ஆறுகள்,குளங்களில் தண்ணீரின்றி வறண்டுஉள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி அரசு அனுமதி இல்லாத குளங்கள், ஆற்றோரங்களில் மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் மணல் அள்ளுகின்றனர். இவ்வாறு அள்ளப்படுவதால் குளத்தில் குறைந்தளவு உள்ள நீர்வளமும் பாதிக்கப்படுகிறது. ஆயக்குடி குளத்தில் நீர்பிடிப்பு பகுதி, தண்ணீரின்றி உள்ளதால் மணல் நிறைந்த இடத்தில் பகல்நேரத்திலேயே மாட்டுவண்டிகள், டிராக்டர்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுபணித்துறை கண்டுகொள்ளவில்லை. என பொது மக்கள் குறை கூறுகின்றனர். பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில்," மாட்டுவண்டிகளில் குளங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதியில்லை. திருட்டுத்தனமாக மண் அள்ளும் வாகனங்கள், மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபதாரத்தொகை வசூலிக்கப்படும். மணல் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.