மேலூர்:மதுரை மாவட்டத்தில் நடந்த, கிரானைட் முறைகேடு வழக்கில், மேலூர் கோர்ட்டில், பி.ஆர்.பி., நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, நேற்று ஆஜரானார்.
கிரானைட் குவாரி முறைகேடு குறித்து, மேலூர் அருகே, 175 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. முறைகேட்டில் ஈடுபட்டதாக பல குவாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. பி.ஆர்.பி., நிறுவனம் மீது, 34 வழக்குகள் பதிவானது. முதற் கட்டமாக தொடரப்பட்ட, 20 வழக்குகளில், பி.ஆர்.பழனிச்சாமி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது, மேலும், 14 வழக்குகள் பதிவாயின.
20 வழக்குகளில், அவர் ஐகோர்ட் கிளையில், முன்ஜாமின் பெற்றதுடன், மற்ற வழக்குகளில், தன்னை கைது செய்ய கூடாது என, கோரினார். அதனை ஏற்று, 14 வழக்குகளுக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலூர் கோர்ட்டில் ஆஜராகி அதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று மேலூர் கோர்ட்டில், அவர் நேற்று ஆஜரானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.