நகரி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி திருமலை கோயிலுக்கு இன்று மாலை வரவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார். ராஜபக்சேவின் வருகைக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து திருப்பதி வரும் அவருக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக திருப்பதி (ரேணிகுண்டா) விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலையில் இன்று மாலை முதல் ராஜபக்சே திரும்பிச் செல்லும் வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமலை முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்ன வேங்கடச்சலபதிக்கே தடை உத்தரவா? அப்பா நம்ம பக்தர்கள் கால் கடுக்க நிக்க வேண்டியது தான். இவன் எதுக்கு இப்போ திருப்பதிக்கு வரான்? வெங்கடசலபதி சாமிய தள்ளி வச்சுட்டு ராஜபக்சேவ அங்கேயே நிக்க சொன்னாலும் சொல்லுவானுவ ஆந்திர காங்கிரஸ் காரனுவ.. ஒங்களுக்கே லட்டு கொடுத்தாலும் கொடுப்பன் இந்த ரா. பக்சே. பாலாஜி சாமி சூதானமா இருந்துக்குங்க..
தமிழர்களை கொன்று குவிததுமல்லாமல் அவர்களுக்கு சம உரிமையை கொடுக்க மறுக்கும் சிங்கள அதிபரை நாம் இந்தியாவிற்குள் அனுமதிக்ககூடாது. சீன உதவியை காரணம் காட்டி அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுப்பது நம்முடைய கோழை தனத்தை காட்டுகிறது. இது மோசமான ராஜதந்திரம். சீன இலங்கையில் காலடி எடுத்து வைத்தல் நாமும் சினவிற்கு அருகில் உள்ள நாட்டில் காலடி எடுத்து வைத்து பதிலடி கொடுக்க வேண்டும். இதில் அனுபவிப்பது ராஜபக்ஷேவே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.