சென்னை : தமிழக சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால், அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாள் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கவர்னர் உரை மீதான விவாதம் தொடர்பாக, முதல்வர் பதிலளிக்க உள்ளார். இந்நிலையில், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ தமிழழகன், முதல்வரை வாழ்த்திப் பேசினார். அப்போது , தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் பேசுவதற்கு, சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அப்போது, தமிழழகனுக்கும், வெங்கடேசிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்ற நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.