சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய திட்டக்குடி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன் மற்றும் இதர எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே தமிழக சட்டசபையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனுக்கு அடி விழுந்தது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கவிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திட்டக்குடி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன், தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டதாகவும், அவற்றை முறையாக பரிசீலித்த முதல்வர், முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற உறுதியளித்ததாகவும், அதன்பின்னர் தனது தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், தன்னைப் போலவே, மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., களும் முதல்வரை சந்தித்து, தங்களது தொகுதி பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும் என்று தெரிவித்தார். தமிழழகனுக்கு ஆதரவாக ராதாபுரம் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனும் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தமிழழகனை தாக்க முற்பட்டனர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன், தமிழழகனை யாரும் தாக்காமல் தடுக்க முயன்றார். இதனால் அவரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ராயப்பன் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மைக்கேல் ராயப்பன் திருப்பித் தாக்கியதில், அனகை முருகேசன் என்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வுக்கு சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் நடந்த போது, முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அஹா கிளம்பிட்டாங்கயா...கிளம்பிட்டாங்க..சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு....தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் ஆளுங்கட்சி சார்பில் வளர்ச்சி பணிகள் நடை பெறவில்லை....கட்சி மாறிய தேமுதிக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் கொஞ்சமும், ஸ்ரீரங்கம் தொகுதியில் கொஞ்சமும் நடை பெறுகின்றன. அவ்வளவுதான்...இதுக்கு போயி அந்த தமிழஷகன் வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம கூவி சண்டையை கிளப்பி விட்டாருய்யா? இவரு போனதோட இல்லாம இருக்கற எம்.எல்.ஏக்களையும் இழுத்தா பொத்திகிட்டு போக என்ன மானம் கெட்டவங்களா? தனியா வச்சு கவனிக்க போறாங்க ...
தர்ம அடி விழுந்தி்ருக்கும் போல..சட்டை கிழிந்த எம் எல் ஏ க்கு புதி்ய சட்டை வாங்கி தரும்படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்..வேறு யாருக்காவது டவுசர் கிழிந்ததா என்பதையும்,வாய் கிழிந்து ரத்தம் வருகிறதா என்பதையும் சரியான கேமரா வைத்து கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்..அடுத்த முறை சண்டை போடும் போது ஊமை குத்தா குத்தவும்..நன்றி..வாழ்துகள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.