புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருவது, அவர்களை எதிர்த்து அவர்களை போராட்டம் நடத்திக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே, 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாயினர். இந்நிலையி்ல், டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோவிடம், ராஜபக்சேவை கண்டித்து, சென்னையில் திமுக நடத்தும் போராட்டம் குறித்து கேட்டதற்கு, அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்தி வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் தானே குற்றவாளிகள் என்று வைகோ கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அக்கட்சி பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று வைகோ கூறியதற்கு, தாங்கள் வெளியேறினால், அவர் உட்புகலாம் என்று நினைத்திருக்கிறாரோ என்று கருணாநிதி பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.