சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்சே, ஹிட்லரை போன்று செயல்பட்டு வருவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து, திமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கறுப்புச்சட்டை போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சி பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடு, சர்வாதிகாரி ஹிட்லரை ஒத்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்கப்படும் என்று இந்தியாவிடம் உறுதியளித்து விட்டு, வேண்டிய உதவிகளை நம்மிடம் இருந்து பெற்று , தற்போது தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று அவர் கூறுவது கண்டனத்திற்குரியது. அவர் கபட நாடகம் ஆடுவதாக ஸ்டாலின் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கோயபல்ஸ் பிரச்சாரத்தை அன்றைக்கு முன்வைத்தது யார் ... கொடூரத் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்று கொந்தளித்த தமிழகத்தை "போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" எனப் பொய் சொல்லி உலகம் இதுவரை கண்டிராத கேலிக் கூத்தான உண்ணாவிரதத்தை கைவிட்ட உத்தமபுத்திரன் யார் ... நான்கு ஆண்டுகள் குறட்டைவிட்டு தூங்கிவிட்டு திடீரென விழித்து நிதானமாக அலசி ஆராய்ந்து நீங்கள் சொல்வது போல் ராஜபட்சே ஹிட்லரைவிட கொடியவனே... நீங்களே சொல்லுங்கள், கோயபல்சை விடக் கொடிய பொய்காரன் யார்
இலங்கையில் வாழும் தமிழர்களை இனியும் வாழ விடமாட்டிர்களா. பிரபாகரன் இறந்தபோது கருணாநிதி எங்கே போனர், ஸ்டாலின் என்ன செய்தார், வீரமணி யாருக்கு மணி அடிக்க போனார். சுபவி என்ன செய்தார். இவர்களுக்கு தமிழ் என்பது அரசியலுக்கும் தமிழன் என்பவன் தீக்குளிக்கவும் மட்டுமே வேண்டும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று. வேலை அற்ற மாமியார் வேதாளத்தை தொட்டிலில் போட்டு ஆட்டினாலாம்
அனுமதி கொடுத்த மத்திய அரசவையில் முக்கிய கட்சி உங்களது. உங்களது சுயநலத்துக்கு ஒட்டி உறவாடுகிரீர்கள், மக்களை ஏமாற்ற கருஞ்சட்டை அணிந்து போராட்டம், ஸ்டாலின் அவர்களே வெளிநாடுகளில் தமிழர்களை வஞ்சிக்கும் அரசவையில் இருந்து இம்சை கொடுத்தது போதாது என்று உள்நாட்டில் வாக்களிக்காமல் இருந்த பல்லாயிரம் தமிழர்கள் பணிக்கும் இதர விஷயங்களுக்கும் போராட்டம் என்ற பெயரில் இம்சை என்னும் இடைஞ்சல் நாடகம் நடத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் பொழுதை கழியுங்கள்...
இப்பதான் தெரிந்ததோ ?இலங்கை தமிழனை அவனுடன் சேர்த்து உங்களது கூட்டனி அரசு கொன்று குவித்தபோது தெரியவில்லையா ? கண்ணிருந்தும் குரடனைபோல் இருந்தீர்களே உங்களது சகோதரி இலங்கை சென்று இந்த ஹிட்லரிடம் பரிசுப்பொருள் வாங்கியபோது தெரியவில்லையா ? சண்டை என்றல் சாகத்தான் வேண்டும் என்று உங்கள் அப்பா கூறியபொழுது தெரியவில்லையா ?இந்த திடீர் பாசம் ஏன் என்று குழந்தைக்குகூட தெரியுமே ?தமிழ் மக்களை ஏமாற்ற முடியுமா ஒட்டு பொறுக்கத்தான் இந்த திடீர் பாசம் என தமிழனுக்கு தெரியாதா. நிறுத்துங்கள் உங்களின் நாடகத்தை உங்கள் நாடகத்தை திமுகவின் அடிமைகள் ,சொம்புகள் வேண்டுமானால் நம்பலாம் உண்மைத்தமிழன் நம்புவான என்ன நம்பமாட்டன் உங்கள் நாடகத்தை .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.