Advertisement
சென்னையில் "ஹெலிபோர்ட்' அரசு முடிவு : நினைத்த இடத்தில் இனி கிளம்பலாம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,19:57 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,19:59 IST

புதுடில்லி : ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்பட்டு செல்லும், பிரத்யேக, "ஹெலிபோர்ட்'கள், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விரைவில் துவக்கப்பட உள்ளன. பெரு நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும், போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சாலைகளில் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால், குறிப்பிட்ட நேரத்தில், எங்குமே செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி, நினைத்த இடத்தில் இறங்க முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகுதான், ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.


மேலும், விமானங்கள் வந்திறங்கும், "ஏர்போர்ட்' போல், ஹெலிகாப்டர்களை இறக்க, "ஹெலிபோர்ட்'கள் கிடையாது. ஆகவே, விமான நிலையங்களிலும், விமான தளங்களிலும் தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. ஹெலிகாப்டரில் பயணம் செய்தாலும், விமான நிலையங்களில் இருந்து வெளியே வந்து, மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் நிலை தான் காணப்படுகிறது.


இதனால், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும், பிரத்யேக, "ஹெலிபோர்ட்'களை, முன்னணி நகரங்களில் துவக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும், அதன் பிறகு, சென்னை, கோல்கத்தா, லக்னோ போன்ற நகரங்களிலும், "ஹெலிபோர்ட்'கள் துவக்கப்பட உள்ளன.


இது குறித்து, ஹெலிகாப்டர்களை இயக்கும், "பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ்' நிறுவனத்தின் செயல் இயக்குனர், சஞ்சீவ் பஹல் கூறும் போது, ""ஹெலிபோர்ட்களுக்கும், குறைந்தபட்சம், 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நகர பகுதிகளில் இவ்வளவு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், திட்டம் தாமதமாகி வருகிறது. விரைவில் சில நகரங்களில் இத்திட்டம் துவக்கப்படும்,'' என்றார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Sankar Km - Santa Clara,யூ.எஸ்.ஏ
10-பிப்-201302:45:23 IST Report Abuse
Sankar Km First get us the basic needs like food, water, power and shelter. Then think about fancy helipads and private aircraft for the corrupt few. The priority is wholly wrong. Putting cakes to the cakes when the basic food supply is in doubt.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
amirthalinkam.s - namakkal,இந்தியா
09-பிப்-201309:51:18 IST Report Abuse
amirthalinkam.s ஹெலிபோர்ட் தேவையான ஒன்றுதான். வரவேற்க வேண்டியது. முக்கிய பிரமுகர்கள் நகர் வலத்தில் மக்கள் சிக்கி தவிர்ப்பது குறையும்.
Rate this:
5 members
0 members
10 members
Share this comment
Mohandhas - singapore,சிங்கப்பூர்
09-பிப்-201308:08:31 IST Report Abuse
Mohandhas நாட்டுல நிறைய அடிப்படை வசதிகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே கிடக்கிறது.. அதை முதலில் சீர் செய்யுங்கள்.. ஹெலிஹப்டர்ல பொதுமக்கள் யாரும் போறதில்ல... இதுவா இப்ப முக்கியம்.....??????????
Rate this:
3 members
0 members
24 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-பிப்-201305:28:58 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஹையா, ஜாலி... அப்போ மம்மி டெய்லி கொடநாடு போகலாம்..
Rate this:
4 members
0 members
63 members
Share this comment
Raghu - Umeå,சுவீடன்
09-பிப்-201305:06:59 IST Report Abuse
Raghu யார்யா சொன்னது 25 ஏகர் வேணும்னு . 10 சென்ட் ல ஹெலிபாத் இருக்கு யா வெளிநாட்ல. படிச்சவங்கள டிசைன் பண்ணசொல்லுங்க.
Rate this:
0 members
0 members
29 members
Share this comment
yila - Nellai,இந்தியா
09-பிப்-201303:19:15 IST Report Abuse
yila நகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், மண்ணின் மைந்தர்களையும் விரட்டி விட்டு, அவர்களுடைய நிலங்களில் ஹெலி போர்ட்டுகளை அமைக்கலாம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இனி கவலையே இல்லை.. தினமும் ஹெலிகாப்ட்டர் களில் பறந்து பறந்து தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம். அட உணர்வற்ற அரசியல்வாதிகளே 2014 ல் வரப்போகும் தேர்தலுக்குப் பறந்து பறந்து பிரச்சாரம் செய்வதற்கு மக்கள் பணத்தில் போடும் "வயிற்றெரிச்சல்" திட்டங்களான இவைகள் எங்களுக்குப் புரியாது என்று நினைத்தீர்களோ? உணவின்றி,மின்சாரமின்றி, தண்ணீரின்றி மக்கள் பாடும் பாடு உங்களுக்கு என்றுதான் உரைக்கப் போகிறதோ?
Rate this:
0 members
1 members
30 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.