ஸ்ரீவில்லிபுத்தூர்: வருவாய் கோட்ட நூலகங்களாக தரம் உயரும் நூலகங்களுக்கு, சொந்த இடம் தேடும் பணியில், நூலகத்துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது சொந்த, இலவச கட்டடங்களில் இயங்கும் நூலகங்கள், நிர்ணயித்த அளவை விட குறைவாக இருப்பதால், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், ""குறைவான இடம், வாடகை கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள் அருகில், 2 ஆயிரம் சதுர அடி காலி மனையை தேர்வு செய்து, ஆர்.டி.ஓ., கலெக்டரிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு,'' மாவட்ட நூலக அலுவலர்களுக்கு, பொது நூலகத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசின் காலியிடங்களை பெறும் முயற்சியில், நூலகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.