சென்னை: மத்திய அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்சேவின் சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட முன்வர வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் 65வது சுதந்திர தின விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என்றும், நாட்டை இனரீதியாக பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் அறிவித்துள்ளார். மேலும், இன வேறுபாடுகள் குறித்தும், தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் கலாச்சாரத்தைப் பற்றியும் இந்த பூனையும் பால் குடிக்குமா என கேட்குமளவுக்கு பேசியிருக்கிறார். லட்சக்ணக்கான தமிழர்களை படுகொலை செய்து, லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கையிலிருந்து அகதிகளாக புலம் பெயரச் செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும், வீடுகள், நிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறித்து விட்டு, நாட்டை சர்வாதிகாரப் பாதையில் செலுத்தி வரும் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.
சிங்கள பேரினவாத சின்னமான ராஜபக்சே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உறுதி மொழி அளித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதை ராஜபக்சே மீறியிருக்கிறார். இதற்காக உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடந்த 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்தது. ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பிறகும் இதுவரை அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், அதற்கு எதிரான காரியங்களை மட்டுமே தற்போது இலங்கை செய்து வருகிறது. இப்போதாவது மத்திய அரசு விழித்துக்கொண்டு ராஜபக்சேவின் சுய உருவத்தையும், குணத்தையும் புரிந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பறிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.