சென்னை: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் வெற்றிப் பெற்று விட்டதாகவே கருதுகிறோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கே தேர்தல் கமிஷன் அமைக்கப்படுகிறது. அதற்கு உறுதுணையாக இருப்பது மாநில அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடக்கும் விதத்தை பார்க்கும் போது, தேர்தல் கமிஷனும், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படும் போலீசும், எந்த வகையிலும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. நான் அங்கு, ஆறு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த போது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரியும், பார்வையாளர்களும் என்ன செய்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் இதை தடுக்காதது மட்டுமல்ல; முழுக்க, முழுக்க ஆளுங்கட்சிக்கே துணை போகின்றனர் என, நான் கருதுகிறேன். அமைச்சர்கள், 32 பேர், தொகுதியில் வேலை செய்தது, முதல்வர் ஜெயலலிதா, 10 இடங்களில் பிரசாரம் செய்தது, அளவின்றி பணத்தை வாரி இறைத்தது, அதிகார துஷ்பிரயோகத்தை வரம்பு மீறி செய்தது ஆகியவை, எங்களால் ஏற்பட்ட பயத்தால், விளைந்த சாட்சிகள். இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்க ரொம்ப நல்ல வருவீங்க தம்பி. உண்மையாக சொல்கிறேன். . உங்கள் எண்ணம் பேச்சு கனவு எல்லாமே வெற்றி வெற்றி தான். நிஜமாகவே வெற்றி பெறாவிட்டாலும் அந்த கனவு இருக்கிறதே அது ஒன்றே போதும். இப்பொழுது இல்லா விட்டாலும் எப்பொழுதாவது,,, அதாவது நீங்கள் தற்போதைய கருணாநிதி போன்று பழுத்த வயது அடைந்து விட்ட பின்னராவது,, ஆட்சி கட்டிலில் ஏறி படுக்க வைக்கும் கனவு உங்களுடைய கனவு.. மக்கள் பிரச்சினைக்காக உழைக்க நீங்களும் தான் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். உங்களை எல்லாம் தலைவராக அடைவதற்கு உங்கள் கட்சிகாரர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தார்களோ. ஆகட்டும், அது தான் வெற்றி பெற்று விட்டீர்களே, இனி என்ன, மக்களின் துயரினை துடைக்க வேட்டியை மடித்து கட்டி கொண்டு களத்தில் இறங்குங்கள். உங்களுக்காக தான் மக்கள் எல்லோரும் பல பல பிரச்சினைகளுடன் WAITING ... COME ON START .
நிச்சயமாக அத்தனை பேரும் ராஜினாமா செய்ய போகின்றனர். சவால் விடுவது பெரிய விஷயம் இல்லை. எதிரில் அமர்ந்த எல்லோரும் கை நீட்டி பேசியதை கேட்பதற்கு ரசிகர் இல்லை. அ தி மு க வெற்றி பெற்றால் அதை விட கேவலம் சவாலுக்கு இல்லை சட்ட மன்றத்தில் நிச்சயம் கேட்பார்கள் யார் இல்லாமல் யார் என்பது நிரூபணம் ஆனால் கதை முடிந்தது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.