Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012,23:37 IST
கருத்துகள் (7)
திருச்சி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய, டி.எஸ்.பி., செல்வமணி, அரசியல்வாதிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆசியோடு, "ஜெகஜால' கில்லாடியாக வலம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி.,யாக இருந்த செல்வமணி, நேற்று முன்தினம், அறக்கட்டளைக்கு தடையில்லா சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார். அவர் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.டி.எஸ்.பி., செல்வமணி மீது, லஞ்ச புகாரோடு, பாலியல் புகார்களும், மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி.,யிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தயாரான போது, முன்னாள், டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு
பெற்ற ஒருவர், டி.எஸ்.பி., செல்வமணிக்காக உயர் அதிகாரிகளிடம் பேசி, துறை ரீதியான நடவடிக்கையை தடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை ராயபுரத்தில், உதவி கமிஷனராக செல்வமணி பணியாற்றிய போது, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி.,க்கு மிகவும் வேண்டியவராக இருந்துள்ளார். அதோடு, தி.மு.க.,வின் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவராகவும் இருந்ததால், கடந்த ஆட்சியின் போது, ராயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்து, அங்கேயே உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று பணியாற்றியுள்ளார்.ராயபுரத்திலிருந்து, திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பகப் பிரிவு உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆறு மாதத்துக்கு முன், லால்குடி, டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட அவர், அங்கும் புகார் கொடுக்க வருபவர்கள், புகாரில் சிக்கியவர்களிடம், லஞ்சம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக்
Advertisement
கூறப்படுகிறது. பண விவகாரத்தில் மட்டுமல்லாது, பெண்கள் விஷயத்திலும் செல்வமணியின் செயல்பாடுகள் மோசமாக இருந்துள்ளது. லால்குடி பெண் போலீஸ் ஒருவர், கல்லக்குடி பெண் போலீஸ் ஒருவரை, தன் வலையில் வீழ்த்திய, டி.எஸ்.பி., செல்வமணி, ஒரு பெண் எஸ்.ஐ.,யிடம் வாலாட்டிய போது, அந்த பெண்மணியின் கண்டிப்புக்கு உள்ளாகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், டி.எஸ்.பி., செல்வமணி, தனக்கு, தி.மு.க.,வில் இருந்த செல்வாக்கு மற்றும் போலீஸ் உயரதிகாரிகளிடம் இருந்த செல்வாக்கு மூலம், "ஜெகஜால' கில்லாடியாக வலம் வந்ததற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக, திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
Citizen - Blore,இந்தியா
24-ஜூலை-201209:06:09 IST Report Abuse
Citizen அந்த டி ஜி பி என்ன இந்த ஆட்சிக்கு வேண்டியவரா என்ன?? பெயரை சொல்லவில்லை..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Wilson Mathalaimuthu - Sibu Laut,மலேஷியா
22-ஜூலை-201208:24:14 IST Report Abuse
Wilson Mathalaimuthu இந்த ஆசாமி மாதிரி இன்னும் நெறைய ஆளுங்க இருக்காங்க. இந்த நடவடிக்கை தொடர்ந்து எல்லா துறைகளிலும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.குறிப்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் இது போன்ற ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vel Pandian - Chennai,இந்தியா
21-ஜூலை-201222:50:26 IST Report Abuse
Vel Pandian இந்த பொழப்புக்கு வேறு வேலை செய்யலாம் .. உங்களுக்கு சம்பளம் கொடுத்து அதுக்கு மேல படி காசு கொடுத்து போய் வர வண்டி கொடுத்து , பதவி கொடுத்து , உங்க பசங்களுக்கு படிக்க கோட்டா கொடுத்தா, வேலையும் செய்யாம லஞ்சம் வாங்குற து து து ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஸ்ரீவி-ஜெய் - Srivilliputtur ,இந்தியா
21-ஜூலை-201216:08:08 IST Report Abuse
ஸ்ரீவி-ஜெய் குத்து பாட்டுக்கு ஆடும் நடிகை மெல்ல முக்காடை தூக்குவது போல போஸ் கொடுக்குறான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vasan - doha,கத்தார்
21-ஜூலை-201210:28:08 IST Report Abuse
vasan மூஞ்சிய பாரு எதுக்கு டா மூஞ்சிய பொத்திட்டு இருக்குற இப்போ அசிங்கமா தோணுது அப்போ எதுக்கு இந்த மாதிரி கேவலமான் வேல செய்யுற
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
21-ஜூலை-201206:04:21 IST Report Abuse
Vaigai Selvan அட நாதாரி.. உன்னைப்போல இருக்குரவங்கலாலதான் காக்கி உடுப்புக்கே களங்கம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arjun - city,இந்தியா
21-ஜூலை-201205:46:15 IST Report Abuse
Arjun .......லஞ்சம் வாங்கும் இந்தமாதிரியான நபர்கள் கையேடு தினமும் ஒரு டவல் அல்லது துணி போர்வை எடுத்துகொண்டு தான் ஆபிஸ் வருவானுவளோ...நாதாரி நாய்கள்..ஆமாம்..அந்த DIG யார் என்பதை சொல்லவேயில்லை. Ajn
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.