Advertisement
லோக்சபா தேர்தலில் காங்கிரசை வீழ்த்த ராம்தேவ் சபதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2012,23:44 IST

புதுடில்லி:""ஊழலை ஒழிக்கும் விஷயத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நாட்டு மக்களையும், பார்லிமென்ட்டையும் ஏமாற்றி விட்டது. அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரசை தோற்கடிப்போம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என, ஆவேசப்பட்ட பாபா ராம்தேவ், தன் உண்ணாவிரத போராட்டத்தை, நேற்றுடன் முடித்துக் கொண்டார். அம்பேத்கர் மைதானத்திலிருந்து, தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும், ஊழலுக்கு எதிராக, பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும், பாபா ராம்தேவ், கடந்த ஆறு நாட்களாக, டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.இவரது கோரிக்கையை, மத்திய அரசு கண்டு கொள்ளாததை அடுத்து, நேற்று முன்தினம், தன் ஆதரவாளர்களுடன், பார்லிமென்டை நோக்கி, பேரணி மேற்கொண்டார். அவரையும், அவரது ஆதரவாளர்களையும், போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

கெடு:



அனைவரையும் அம்பேத்கர் மைதானத்தில் தங்க வைத்தனர். இதன்பின், அவர்களை விடுவிப்பதாக போலீசார் அறிவித்ததும், ராம்தேவ், வெளியேற மறுத்து விட்டார். தன் ஆதரவாளர்களுடன், மைதானத்திலேயே, போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையே, சுதந்திர தின விழா நடக்கவுள்ளதால், மைதானத்தை விட்டு, இன்று (நேற்று) பகல் 1 மணிக்குள் வெளியேறும்படி, ராம்தேவுக்கு, டில்லி போலீசார் கெடு விதித்திருந்தனர். இந்நிலையில், நேற்று, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக, ராம்தேவ் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, குழந்தைகள் கொடுத்த பழச்சாறை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.முன்னதாக, காங்கிரஸ் அரசையும், பிரதமரையும், கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது:என்னுடைய போராட்டத்துக்கு, 400 எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கவும், நடவடிக்கை எடுப்பதாக கூறி, நாட்டு மக்களையும், பார்லிமென்ட்டையும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏமாற்றி விட்டது. காங்கிரசை தவிர, அனைத்து அரசியல் கட்சிகளும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கவிழும்:



கறுப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில், பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால், கண்டிப்பாக, மத்திய அரசு தோற்று விடும். முலாயம் சிங் யாதவும், மாயாவதியும், ஆதரவை வாபஸ் பெற்றால், ஒரே நாளில், மத்திய அரசு கவிழ்ந்து விடும்.கறுப்பு பணத்தை மீட்கும் விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங், நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படவில்லை எனில், பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், நாளை (இன்று) தேசியக் கொடி ஏற்றுவதை, எங்களால் தடுக்க முடியும். ஆனால், அது சரியான நடவடிக்கை அல்ல. அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க மாட்டோம். கண்டிப்பாக, காங்கிரசை தோற்கடிப்போம். கறுப்பு பணத்தை மீட்பதற்கு, யார் உதவுகின்றனரோ, அவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்போம். சுதந்திர தின விழா நடக்கவுள்ளதால், அதற்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதற்காக, இங்கிருந்து வெளியேறுகிறோம்.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.இதையடுத்து, நேற்று இரவு, ஹரித்வாரில் உள்ள, தன் ஆசிரமத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

மாயாவதி பாய்ச்சல்:



கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்ட ராம்லீலா மைதானத்துக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ஆகியோர், நேற்று முன்தினம், நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதத்தை, எங்கள் கட்சி ஆதரிக்கிறது. ஊழலுக்கு எதிராக, யார் போராட்டம் நடத்தினாலும், அதை ஆதரிப்போம். அதேநேரத்தில், உண்ணாவிரத மேடையில், கட்காரி, சரத் யாதவ் போன்ற, தே.ஜ., கூட்டணி தலைவர்களை அனுமதித்ததை, ஏற்க முடியாது. ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் அரசியல் கூடாது என்பதே, எங்கள் கருத்து.இவ்வாறு மாயாவதி கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (22)
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
15-ஆக-201219:37:03 IST Report Abuse
மும்பை தமிழன் காங் ம் திருடன் பிஜேபி யும் திருடன் DMK உம்திருடன் ADMK உம் திருடன் பின்னே யாருக்கு தான் VOTE போட வேண்டும் அருள் மும்பை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
maran - riyadh,சவுதி அரேபியா
15-ஆக-201215:02:00 IST Report Abuse
maran கிளம்பிட்டானே ....கிளம்பிட்டானே ...யார் யாரோ ஊழலை பற்றி பேசுறாங்கோ .....கேட்கவே அவமானமாக இருக்கு ....மக்களே சில பன்னிகள் ஊழல் பேசுது ....பார்த்திகிட்டு என்ன செய்றீங்க .....?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sami annachi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-201211:35:08 IST Report Abuse
sami annachi ஒரு தாயின் சபதம் கேள்விப்பட்டு இருக்கேன் ஏன் மங்கம்மா சபதம் கூட கேள்விப்பட்டு இருக்கேன் இப்பதாய ஒரு காவி இன் சபதம் கேள்விபடுறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Asokan Sivavadivel - Jeddah,சவுதி அரேபியா
15-ஆக-201211:09:52 IST Report Abuse
Asokan Sivavadivel வெள்ளைப்பணம், கள்ளப்பணம், கருப்புப்பணம், சுவிஸ் பணம் அனைத்தையும் ஒரே கல்லில் அடித்து வீழ்த்தும் புதிய அரசியல் பொருளியல் கொள்கைகளுடன் &39விஷ்வ வயாபி சம்பூர்ண சீதா பிரஜா தந்த்ர ஜன சமூகா&39 அதாவது &39உலகு தொகு நேரடி குடியரசுக் குழு&39, &39குளோபல் இன்டக்ரல் டைரக்ட் டெமோக்ரடிக் பார்ட்டி &39 விரைவில் களம் இறங்க இருக்கிறது. பணத்தை மட்டுமல்ல ஆரிய திராவிட, தமிழ் சிங்கள, இந்து இஸ்லாமிய அரசியலையும் ஒழித்துக் கட்டவிருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kevin - chennai,இந்தியா
15-ஆக-201210:17:57 IST Report Abuse
kevin ஒரு யோகா குருவிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று முதலில் தெரிவிக்க வேண்டும்...இவர் மேல் வரிஏய்ப்பு பன்னதிற்கான கேஸ் நிலுவையில் உள்ளது...ஆயுர்வேத மருத்துவம் மூலம் பல கொடிகளை சம்பாதித்து அதற்குரிய வரியை இன்னும் அரசுக்கு செலுத்தவில்ல என்ற புகாருக்கு இவர் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை...இப்படி இருக்கும் போது மற்றவருக்கு இவர் அறிவுரை சொல்வதுக்கு எந்த தகுதியும் இல்லை....இது தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதோ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோரக்.குமார் - CHENNAI,இந்தியா
15-ஆக-201209:59:12 IST Report Abuse
கோரக்.குமார் ஹாசரே சபதம் சத்தம் இல்லாமே போச்சி. நீங்களாவது சொன்னபடி செய்ய முயற்சி செய்யுங்க... சரஸ்வதி சபதம், மங்கம்மா சபதம்.. என்ற வரிசையில் ராம்தேவ் சபதம் .... இந்திய மக்களுக்கு இவ்வளவு கஷ்டகாலத்திலும் இந்த மாதிரி காமடிகள் தேவைதான்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
unmaiyalan - bangaluru,இந்தியா
15-ஆக-201208:43:10 IST Report Abuse
unmaiyalan அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க மாட்டோம். ...சரி அப்ப யாருக்கு ஓட்டு போடா போகிறீர்கள் ...?.......49 o ஐ பயன்படுத்த போகீரீர்களா .....அதான் முழுக்க நனைத்து விட்டாச்சு முக்காடு எதுக்கு ?...பி.ஜே.பி க்கு ஆதரவு ...சரியா ?....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-ஆக-201207:46:16 IST Report Abuse
ஆரூர் ரங ஊரறிய ஊழல் செய்பவர்கள் தண்டனை அனுபவிக்காமலிருக்கமுடியாது. தப்பவே முடியாது. நேற்றுகூட ஆதர்ஷ் ஊழல் முக்கிய குற்றவாளி கல்லீரல் நோயால் அகால மரணமடைந்தார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raju - Madurai,இந்தியா
15-ஆக-201207:43:46 IST Report Abuse
raju நீ பிஜேபி ல பொய் குப்பபோட்டு கண்ணா ... அடுத்த பிரதமர் நீ தான் .. அங்காதன் PM க்கு ஆல் இல்லாமல் அல்லல்படுரங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sitaramenv - Hyderabad,இந்தியா
15-ஆக-201207:08:56 IST Report Abuse
sitaramenv போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும். ராம் தேவா அவர்களின் புனிதமான நோக்கத்தை எதிர்ப்பவர்கள் கருப்பு பண கோஷ்டியை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். அனைத்து கட்சிகளிலும் ஊடுருவி உள்ளனர். பதவி மோகத்திற்காக பதவி துஷ்ப்ரயோகத்திர்காக ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கி மக்களை முட்டாளாக்க நினைத்து செயல் படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். இத்தனை நாளாக சாத்தானாக இருந்து கருப்பு பண முதலைகளுக்கு கேடயமாக இருந்த ஒரு சக்தி இப்போது நாட்டின் குடியரசு தலைவராம். வெட்கக்கேடு. இப்போது சாத்தான் வேதம் ஓதுகிறது. அடுத்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் சாத்தான்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். திரு ராம் தேவா இந்த புனித போருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. அவரை விமர்சிப்பவர்களை ...துரோகிகள் என்றுதான் சொல்ல வேண்டும். துரோகிகள் அல்லது காங்கிரஸ் கைக்கூலிகள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.