மேலூர்:மதுரை மாவட்டம் கீழவளவில் உயரமான "சர்க்கரை பீர் மலை'யை, பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தினர், விதிகளுக்கு புறம்பாக வெட்டி, கிரானைட் கற்களை எடுத்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.
மதுரை கீழவளவு - திருப்புத்தூர் ரோட்டில் சர்க்கரை பீர் மலை உள்ளது. ஒத்தக்கடை யானைமலையை போல், பாறைகள் நிறைந்த இம்மலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த, "ரோஸ்' நிற கிரானைட் கற்கள் உள்ளன. இம்மலையில், பி.ஆர்.பி., நிறுவனத்தினர் கிரானைட் குவாரி அமைத்தனர். மலையின் ஒரு பகுதியை, "கேக்' போல், பாதியாக வெட்டி எடுத்தனர். எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை செதுக்கி, ஏற்றுமதிக்காக கோட்டை போல் அடுக்கினர்.
இதற்கு கீழவளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மலையை மீண்டும் ஊராட்சியிடம் ஒப்படைக்கக் கோரி, பி.ஆர்.பி., நிறுவனத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் தலையீட்டை அடுத்து, சர்க்கரை பீர் மலையில் கிரானைட் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. மலையில் பாதியளவு வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இதை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விதிகளுக்கு புறம்பாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதுல ஒரு நேர்த்தி, நியாயம் பாருங்க. போட்டோ பாருங்க...என்ன அழகா ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, சண்டை சச்சரவு போட்டுக்காம, இந்த கோடு வரைக்கும் உள்ளது எனக்கு, அதுக்கப்புறம் உள்ளது உனக்குன்னு, யாருடனோ பங்கு ஒப்பந்தம் போட்ட மாதிரி தெளிவா கோடு போட்ட மாதிரி வெட்டி எடுத்திருக்காங்க..பாசக்கார புள்ளைங்க..தப்பு செஞ்சாலும் தப்பா செய்யறதில்லை...
நான் சமீபத்தில மீனாட்சியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன். இதுக்கு முன்னாடி, 1980 களில் பலமுறை போயிருக்கிறேன். அப்போதெல்லாம், சிவன் சன்னதி வெளிப்பிரகாரத்தில், சித்தர் சன்னதி மூலையில், கம்பிகளுக்கு பின்னால், அழகழகான வெள்ளை கற்களில் செய்யப்பட்ட, மேதா தக்ஷிணாமூர்த்தி, மற்றும் நாக சிவலிங்கம் போன்ற சிலைகள் எல்லாம் இருக்கும். இப்போதெல்லாம் அந்த இடம் காலியாக உள்ளது. அந்த சிலைகள் எல்லாம் எங்கே உள்ளது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.