மின் தேவைகளை பூர்த்தி செய்யும் சூரிய சக்தி:
மனித இன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மின்சாரம். நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, மின்சாரம் அத்தியாவசியமாக உள்ளது. மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளான அனல், புனல், அணு, காற்று உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே, மின்சாரம் பெறப்படுகிறது.
அனல், அணு உற்பத்தி முறைகளில் மூலப்பொருட்களுக்கு, அந்நிய நாடுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையே உள்ளது.அதிக விலை, அதிக பயன்பாட்டால் உண்டாகும் நிலக்கரி பற்றாக்குறையும், காலநிலை மாறுபாட்டால், மழையளவு குறைவதாலும், மின்னுற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதிக செலவால் அணுமின் நிலையங்கள் உற்பத்தியிலும் பிரச்னை உள்ளது. இவற்றை களைந்து, அதிகரித்து வரும் மின் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய, மரபு சாரா மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சூரிய சக்தி, காற்றை அடிப்படையாக கொண்ட மின் உற்பத்தி, தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது.
சூரிய சக்தி அதிகளவு உள்ள நமது நாட்டில், ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். "போட்டோவோல்டிக்' செல்களை பயன்படுத்தி, தயாரிக்கப்படும் மின்சாரத்தை வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தலாம். மின் தேவைகளை, மின்சார வாரியத்தை எதிர்பார்க்காமல் பூர்த்தி செய்து கொள்ளலாம்.வீடு, அலுவலகம் தவிர, தொழிற்சாலை, மில்களின் தேவையை பூர்த்தி செய்யவும், தெருவிளக்குகள், விவசாயம் உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தலாம். மின்சாரத்தை கொண்டு செல்ல இயலாத பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.
அதிகரித்து வரும் :பற்றாக்குறையை சமாளிக்க, சூரிய சக்தியை பயன்படுத்த அரசு முன்வர வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் சூரிய சக்தியை பயன்படுத்த போட்டோவோல்டிக் செல்களின் விலையை குறைக்கவும், மானியத்தை அதிகப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வற்றாத வளமாக இயற்கையில் கிடைக்கும் சூரிய சக்தியை, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த துவங்கினால், இந்தியா மின்மிகை நாடாக மாறும். தொழில் வளம் பெருகி, பொருளாதாரம் செழிக்கும். நாடு வல்லரசாகும்.
ஒரு ரூபாயில் 50 கி.மீ.,"பறக்கும்' வாகனங்கள்:
இன்றைய உலகம் புகை மண்டலம் மிகுந்து, புழுதி படிந்து உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், சுவாசிக்கும் காற்று கூட, நச்சுப்புகையாக மாறிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால், மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகி விடும்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, இன்றைய காலகட்டத்தில் புகையில்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன வடிவமைப்பு, எளிய பராமரிப்பு, குறைந்த விலை, சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்கள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், பல்வேறு மாடல்களில் இவ்வகை வாகனங்கள் வெளிவருகின்றன. ஏஞ்சல், வி 60, போபோ, அத்யா ஜீல், பாடி உள்ளிட்டவை இவ்வகை வாகனங்களில் பிரபலமானவை.ஏஞ்சல் மாடல், மின் சைக்கிள் வகையை சார்ந்தது. இதன் மூலம், ஒரு ரூபாய் செலவில் 50 கி.மீ., தூரம் பயணிக்கலாம். பஸ் கட்டணத்தை விட குறைந்த செலவே ஆவதால், நிறைவான பயணம் செய்யலாம். பெட்ரோல், சாலை வரி, ரெஜிஸ்ட்ரேஷன், லைசன்ஸ் எதுவும், இந்த வாகனத்துக்கு தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் உள்ள பேட்டரியை நாளொன்றுக்கு, 6 முதல் 8 மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதும்.
சோலார் வாட்டர் ஹீட்டர் :சில டிப்ஸ்கள்:
இரண்டு காவிட்டி ஹீட் எக்ஸ்சேஞ் இவாக்குவேட்டட் சோலார் டியூபுளர் கலக்டர்கள்:
இது, ஹீட் எக்ஸ்சேஞ்சர்களுடன் வருவதால், இவற்றில் உப்புநீரை பயன்படுத்தலாம். சாதாரண சோலார் வாட்டர் ஹீட்டர்களில் மிகக்குறைந்த உப்பு சத்துடைய நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில், இவை டியூப்களின் திறனை குறைத்து விடும்.சாதாரண சோலார் வாட்டர் ஹீட்டர்களில், இதை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், இதில் இப்பிரச்னை வர வாய்ப்பில்லை. மேலும் இந்த டியூப்கள், புளூ டைமண்ட் கிளாஸ் கோட்டட் சேமிப்பு டாங்க்குடன் இணைந்து செயல்படும்போது, எவ்வித உப்புநீரையும் பயன்படுத்தலாம்.புளூ டைமண்ட் கிளாஸ் கோட்டட் சேமிப்பு டாங்க்:இந்த விசேஷ டாங்க் வகைகளில், மிகவும் மோசமான உப்புநீரை கூட, உபயோகிக்கலாம். இந்த வகையான டாங்க்குகளை எவ்விதமான டியூப்களுடனும் உபயோகிக்கலாம்.
சூப்பர் - ஹை பிரெஷர் சோலார் கலக்டர்கள்:
இந்த புதிய வகையில் இரண்டு காவிட்டி ஹீட் எக்ஸ்சேஞ் இவாக்குவேட்டட் சோலார் டியூப்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த டியூப்களில், ஹீட் பைப்கள் கிடையாது. இவை ஹீட் எக்ஸ்சேஞ்சாக செயல்படுகிறது. இந்த கலக்டர்கள் மிகுந்த அழுத்தத்தை தாங்கி, அதிகளவிலான வெப்பநிலையை அடையும். இவை குறைந்த விலையில் கிடைக்கிறது.
சிறந்த சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க, சில டிப்ஸ்கள்:
* ஒரு சோலார் ஹீட்டரின் திறனை சரியாக கணக்கிட வேண்டும். திறன் என்பது ஒருநாளில் எவ்வளவு லிட்டர் நீரை வெப்பமாக்கும் என்பதாகும். வெப்பநீரை மாலையிலும் உபயோகப்படுத்தவேண்டும் என்றால், அதையும் திறன் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மாலையில் வெப்பநீரை பயன்படுத்தினால், மறுநாள் காலை வெப்பநீர் கிடைக்காது.
* சோலார் ஹீட்டர் வாங்கும்போது, டியூப்களை சரி பார்க்க வேண்டும். கறுப்பு நிற டியூப்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை ஒரு கோட்டிங் கொண்டுள்ளது; உற்பத்தித்திறன் குறைவு. நல்ல டியூப்கள் நீல நிறத்தில் இருக்கும்; மூன்று கோட்டிங் கொண்டுள்ளது. மிகவும் சிறந்த டியூப்கள், தங்க ஊதா நிறத்தில் இருக்கும்; மிக அதிகமான வெப்பநிலையை அடையக் கூடியவை.
* வென்ட்களுக்கு இன்சுலேஷன் உபயோகப்படுத்த வேண்டும். இவை குளிர்காலத்தில், மின் சக்தியால் ஹீட்டர் இயங்கும்போது, சக்தியை சேமிக்க உதவும். சில நிறுவனங்கள் இன்சுலேஷனை இலவசமாக தருகின்றன.
* டியூபுளர் சோலார் ஹீட்டரில் ரிப்ளக்டர் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். பொதுவாக சூரிய ஒளி மேல்பகுதியில் மட்டுமே விழும். இந்த ரிப்ளக்டர் உதவியால், டியூப்பின் கீழ் பகுதியிலும் சூரிய ஒளி படுவதால், அதிகமான நீர் சூடாகும்.
* ஹீட்டரை தாங்கும் கட்டமைப்பு, துருப்பிடிக்காத பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட கட்டமைப்பு, நீண்டநாள் உழைக்கும்.
* ஹீட்டர் வேலை செய்யும்போது, அதிக வெப்ப நிலையை அடையும். மேலும் படிமண்கள் உருவாகும். இவை காலப்போக்கில், ஹீட்டரின் உற்பத்தி திறனை குறைத்து, செல்பாட்டை நிறுத்தி விடும். எனவே, படிமண்களை அகற்ற வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
* மழைக் காலத்தில் ஹீட்டர் மின் இணைப்பில் செயல்படும்போது, மின் அதிர்வு தாக்க வாய்ப்புள்ளது. எனவே, மின் இணைப்பு டாங்க்கின் உட்புறமாகவும், நன்கு மறைக்கப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
* ஐந்து ஆண்டு வாரன்டி, "ஐ.எஸ்.ஐ.,' அல்லது "எம்.என்.ஆர்.இ.,' முத்திரை உள்ளதா என, சரி பார்த்து வாங்க வேண்டும்.
* "ஐ.எஸ்.ஐ.,' மற்றும் "எம்.என். ஆர்.இ.,' முத்திரை பெற்ற உற்பத்தியாளருக்கு மட்டுமே அரசின் நிதியுதவி உடனடியாக கிடைக்கும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் அரசு நிதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குசும்பா? நானும் அக்காலம் முதலே அந்தத் துறையில் ஈடுபாடு கொண்டவனே. காங்கிரஸ் சார்பாக செயல்பட்ட IBM இங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது, 1978 இல் பல சுதேசி இந்திய கம்பியூட்டர் நிறுவனங்கள் தோன்றின. Chemplast போன்ற இந்திய நிறுவனங்கள் சொந்தமாக சிலிகன் தயாரித்தபோது, அவற்றை ஒதுக்கி விட்டு அந்நிய கம்பெனியான ஹெம்லோக்குடன் ஒப்பந்தம் செய்தார் ராஜீவ். உலக வங்கியின் நெருக்குதலால் பல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு உதவி செய்தார்.,இன்னும் எவ்வளவோ எழுதலாம்.ராஜீவ் காலத்தில் டிவி யும் ரேடியோவும் அரசின் கையில் மட்டுமே இருந்ததால் நாள்முழுக்க அவரது புகழ்பாடி, அவரது இமாலயத் தவறுகளை மறைத்து விட்டன.( தினசரி TV செய்திகள் கூட மந்திரியின் ஒப்புதலுக்குப் பின்னேதான் வாசிக்கப்பட்டன ) அவரது மந்திரிகளும் அரசுக்கெதிராக கருத்து சொல்லும் ஊடகங்களை மறைமுகமாக மிரட்டினர். அவர்களை அடக்க தபால் சென்சார் சட்டத்தைக் கூட ராஜீவ் கொண்டுவர முயன்று தோற்றார். உலகமே எலெக்ட்ரானிக் யுகத்தில் நுழைந்துவிட்டபோது கூட இந்திய அரசு அலுவலகங்களை அவர் ஏன் முழுமையாக கம்பியூட்டர்மயமாக்க முயலவேயில்லை? காங்கிரசின் ஊழல்கள் வெளிவந்துவிடக் கூடாது என்பதால்தானே? தவறான பாராட்டுக்கள்...
இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 150 நாட்களுக்கும் குறைவாக சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாட்டை மக்களிடையே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் மின் பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலங்கள் நிச்சயம் பிரகாசிக்கும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.