Advertisement
இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்புங்கள்: முதல்வர் ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2012,23:55 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 29,2012,00:13 IST

சென்னை:"தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், பயிற்சிக்கு வந்துள்ள இலங்கை ராணுவ வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதிஉள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில், நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில், இலங்கையைச் சேர்ந்த, இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு அளித்து வரும் ராணுவ பயிற்சியை, உடனே நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என, தங்களுக்கு கடந்த, 25ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்.என் வேண்டுகோளை புறக்கணிக்கும் வகையில், மத்திய அரசு வெளிப்படையாக, இலங்கை ஒரு நட்பு நாடு என்றும், அதன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசின் கொள்கைக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துரோகம் விளைவிக்கும் வகையிலுள்ள, மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. நான் மீண்டும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது; எனவே உடனே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (34)
rajaram avadhani - Tiruchy,இந்தியா
30-ஆக-201212:33:29 IST Report Abuse
rajaram avadhani இப்போ திமுக ஆட்சியில் இருந்து, கருணாநிதி இது போல கடிதம் எழுதினால் நீங்கள் அவரை "மக்கள் இங்கு பெரும் அவதிக்கு உள்ளாகும் பொது, இங்கேயே உட்கார்ந்து கொண்டு மதிய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவியோ வேறு எதுவோ வேண்டும் என்றால் மட்டும் தில்லிக்கு நேராக செல்லுகிறார்" என்று கிழி கிழி என்று கிழிப்பீர்கள். ஏன், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெறுவதற்கும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் ஒரு முறை தில்லி சென்று ஒரு வாங்கு வாங்கி விட்டு வாருங்களேன் பார்க்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
30-ஆக-201209:29:27 IST Report Abuse
Pugal சட்ட மன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இருக்கும் ௮ தி மு க, இந்த ராணுவ முகாமிற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவற்றைத் தருவதை நிறுத்தலாம். இந்த முகாமிற்குச் செல்லும் ரோட்டை அடைக்கலாம் ( ராணுவத்தினருக்கான ப்ரொவிஷன்ஸ் - அரிசி, உணவுப் பொருட்கள், ஆடைகள், ஸ்வெட்டர்கள் முதலானவை ) லாரிகளில் வருவதை மாநில அரசு தடை செய்யலாம். இப்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புகள் இருப்பது ஜெயலலிதாவிற்குத் தான்- கலைஞருக்கு அல்ல புரிகிறதா? கருத்து சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
30-ஆக-201209:18:33 IST Report Abuse
Pugal எல் டி டி ஈ இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெற்ற, "பிரபாகரனைத் தூக்கிலிட வேண்டும்" என்று கொக்கரித்த, "போர் என்றால் மரணங்கள் சாதாரணம்" என்று அறிக்கை விட்ட ஜெயலலிதாவின் போலி அக்கறையும், சும்மா வெத்துக் கடிதத்திலும் என்ன நடக்கப் போகிறது? முந்தைய முதல்வர் ஒன்றும் செய்ய வில்லை என்று புகார் படிப்பவர்களே, இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வர் மட்டும் என்ன செய்து கிழிக்கிறார்?? கலைஞர் மாதிரியே இவரும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். இனி இலங்கை தமிழருக்கு மு க ஒன்றும் செய்ய வில்லை என்று சொல்லாதீர்கள். ஜே ஜே வும் தான் ஒன்றும் செய்யவில்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
29-ஆக-201215:55:45 IST Report Abuse
T.C.MAHENDRAN மயிலே மயிலே என்றால் இறகு போடாது, தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும் ஒன்று பட்டு குரல் கொடுத்தால்தான் இந்த பிரச்சனை மட்டும் இல்லாமல், தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டையும் தீர்க்க முடியும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
29-ஆக-201215:51:56 IST Report Abuse
T.C.MAHENDRAN செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரிதான் இந்த கடிதம் எழுதுவதும் ,தினம் ஒரு அறிக்கை விடுவதும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
29-ஆக-201214:37:29 IST Report Abuse
Rangarajan Pg ஆமாம் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா? மறந்தே விட்டது. அடிக்கடி இதை போல எதையாவது எழுதி எங்களுக்கும் மத்திய அரசுக்கும் ""இங்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி"" நடக்கிறது என்பதை நியாபகபடுதுங்கள். அந்த பக்கம் கருணா இந்த இலங்கை விஷயத்தில் OVERDRIVE செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் சும்மா TYPE செய்யப்பட்ட கடிதத்தில் கையெழுத்து போட்டு அனுப்புகிறீர்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
29-ஆக-201214:34:46 IST Report Abuse
GURU.INDIAN இன்றைய தலைப்பில் பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம் என்று போடவில்லையே ஏன் தினமலரே ? பற்றா பாசமா ? எது உன் கண்ணை அறிவை மறைத்தது ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
velladurai.A - gomathimuthupuram, pin:627761,இந்தியா
29-ஆக-201214:05:32 IST Report Abuse
velladurai.A எதிராளி சாவ ஊரையே கொளுத்துற கும்பலின் தலைவி உணர்வை வெறும் வார்த்தைல காட்ட கூடாது ..........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
velladurai.A - gomathimuthupuram, pin:627761,இந்தியா
29-ஆக-201213:58:17 IST Report Abuse
velladurai.A இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thileepan Arasan - Tiruppur,இந்தியா
29-ஆக-201212:54:49 IST Report Abuse
Thileepan Arasan நீலகிரி எங்க இருக்குபா ?.. தமிழ் நாட்டிலா? இல்ல பாகிஸ்த .......................... ?????? 100 உள்ளூருகாரன் காபி குடிக்க அந்த பக்கமா போயிடு வாங்க ... காங்கிரஸ்காரன் ரெண்டு பேருக்கு ஸ்பெஷல் காப்பி வாங்கி கொடுங்க .. எல்லாம் சரி ஆஹிடும் .. புரியுதா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.