Advertisement
"துரை தயாநிதி விவகாரம் கேள்விப்பட்டேன்': கருணாநிதி மழுப்பல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2012,23:38 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06,2012,00:41 IST

சென்னை: ""துரை தயாநிதி மீதான வழக்கு குறித்து, ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த கம்பெனியிலிருந்து, துரை தயாநிதி விலகி விட்டதாக, ஏற்கனவே அறிக்கை விட்டிருப்பதாக, எனக்கு தகவல் கிடைத்தது. அதைத் தவிர, வேறு தகவல் எதுவும் தெரியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.


அறிவாலயத்தில், அவரது பேட்டி: இலங்கைத் தமிழர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காண முடியாத, ஒரு பயங்கரமான சூழலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பிழைப்பதற்கு, எந்த மார்க்கமும் இல்லை. இன்னமும், அவர்கள் எங்கேயாவது ஓடி தப்பித்து, தங்களுடைய குழந்தை குட்டிகளைக் காப்பாற்ற வேண்டிய, அவல நிலையில் இருக்கின்றனர். இதை எல்லாம் சுட்டிக் காட்டி, "டெசோ' மாநாட்டிலே, தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானங்களை எல்லாம், ஐ.நா., சபைக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். இன்னும் ஓரிரு வாரத்தில், ஐ.நா., சபையில், அந்தத் தீர்மானங்களை, ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சென்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்கான தேதியை, இன்னும் இரு நாட்களில் வெளியிடுவேன். விளையாட்டு வீரர்கள், பொதுவாக, கிரிக்கெட் ஆடுபவர்கள், இலங்கைக்கு, இந்தியாவிலிருந்து செல்வதும், அங்கேயிருந்து, இங்கே வருவதும், வாடிக்கையாக நடைபெறும் விஷயம். இங்கே, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, பயிற்சி கொடுக்கக் கூடாது. பார்லிமென்டில் கூட, உரத்தக் குரலில் இதைத் தான் முழங்கிக் கொண்டிருக்கிறோம். பார்லிமென்டிற்கு, எம்.பி.,க்களை வெற்றி பெறச் செய்து, மக்கள் அனுப்பி வைப்பது, தங்களுடைய பிரச்னைகளுக்காக வாதாடுவதற்காகத் தான். அதை விட்டு விட்டு, பார்லிமென்டை இயங்காமல் செய்து விட்டால், எங்கே வாதாடுவது? லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களை, கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த ராஜபக்ஷே, தமிழகத்தில், அல்லது இந்தியாவில், சிறப்பாக வரவேற்கப்படுகிறார் என்றால், அதை, நாங்கள் மனம் விரும்பி ஏற்க முடியாது. நிலக்கரி சுரங்க ஊழல், சொத்துக் குவிப்பு ஊழலை விட பெரியதா, சிறியதா என்று தெரியவில்லை. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (91)
MANJAL THUNDU MAINAR - alkhor,கத்தார்
16-அக்-201215:04:39 IST Report Abuse
MANJAL THUNDU MAINAR ஏம்பா இன்னும் மேட்டர தாத்தா காதில நீ போடல? "எங்கப்பன் (பேரன் என திருத்தி வாசிக்கவும் ) குதிலுக்குள்ள இல்ல"ங்கிறாரே உலக மகா நடிகனையா நீர்? இந்த வருஷம் ஆஸ்கார் விருத தாத்தாவுக்கு ரெகமன்ட் பண்ணுனா என்ன? எதுக்கும் அம்மா காதில இந்த விசயத்த கொஞ்சம் போட்டு வைப்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thamilan - tiruchi,இந்தியா
06-செப்-201200:18:26 IST Report Abuse
thamilan என்னைப்போன்ற அப்பாவி முட்டாள்கள் இவர் ஒரு ராஜதந்திரி தமிழ் நாடு நலம்பெற ஒரு ராஜ தந்திரியால் தான் முடியும் என்று நம்பினோம் ஆனால் இவர் இவ்வளவு பெரிய சுயநல தந்திரியாஆஆஆ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
05-செப்-201216:05:42 IST Report Abuse
R.Saminathan பார்த்து நடத்னுக்கணும் தலைவா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mohan - Slough,யுனைடெட் கிங்டம்
05-செப்-201215:45:23 IST Report Abuse
mohan "பார்லிமென்டிற்கு வெற்றி பெறச் செய்து, மக்கள் அனுப்பி வைப்பது, தங்களுடைய பிரச்னைகளுக்காக வாதாடுவதற்காகத் தான்" இதை சொல்வதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது. நீர் அசெம்ப்ளி செல்வதே இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - madurai,இந்தியா
05-செப்-201214:31:21 IST Report Abuse
saravanan கேள்விப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான் டெசோ மாநாடு, தீர்மானம். எல்லாம் ஒரு நாடகம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A.V.Ramkumar - Thanjavur,இந்தியா
05-செப்-201214:02:07 IST Report Abuse
A.V.Ramkumar என்னது கேள்விப் பட்டீங்களா? மதுரை மாவட்டம் முழுவதும் மொட்டை அடிக்க உங்கள் பேரனுக்கு அதிகாரம் வழங்கியதே நீர்தானே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ravichandran - dar salam ,தான்சானியா
05-செப்-201212:11:51 IST Report Abuse
Ravichandran பெருசு, பாவம் ஒன்னும் தெரியாது. எதாவது புரியற மாதிரி பேசி இருக்கறா பாருங்க,,,,,,,,,,,,,,,,,ராஜபக்சேவை இந்தியாவில் வரவேற்றல் மனம் விரும்பி ஏற்க முடியாது, உங்களுக்கு யாருக்கவது இதன் அர்த்தம் புரியுதா. இதையே அம்மா சொன்னது எப்படினா ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை கண்டிப்பாக ஏற்கமுடியாது, மத்திய அரசிற்கு இதை அழுத்தமஹா தெரிவிக்கிறோம். மு கா,,,,,,,,,,,,,,,,,,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்‌டேன்,,,,,,,,,,,,,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201211:54:10 IST Report Abuse
periya gundoosi மயிலிறகு மகாதேவி மரியா அல்போன்ஸை எங்கே காணோம்...... காலையிலே வந்து கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாங்களா? இல்லை இன்னும் வரலையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201211:44:59 IST Report Abuse
periya gundoosi இந்த கருனாநிதி இப்பொழுது இருக்கும் வயது வரை நம்மை கடவுள் வாழ வைப்பாறா, அப்படியே வாழ வைத்தால் இப்படித் தெளிவாக பேசும் அளவுக்கு நமது மூளை செயல்படுமா என்பது நமக்குத் தெரியாது. அது ரொம்ப சந்தேகமான விஷயம்தான், சந்தேகமான கேள்விதான். இந்த வயதிலும் இவ்வளவுத் தெளிவாக, மக்களை குழப்பும் வகையில் பேசுவது,பதில் தருவது கருனாநிதிக்கு கைகவந்த கலை. இன்னும் எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் இந்த ஹிம்சையை நாம் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டுமோ அது கடவுளுக்குத்தான் தெரியும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Devanand Louis - Chennai,இந்தியா
05-செப்-201211:24:35 IST Report Abuse
Devanand Louis மதுரை அஞ்சாநெஞ்சனின் மகன் ஊழல் தாத்தாவின் வழியில் அரங்கேற்றம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.