திருச்சி: ""எங்கள் நாட்டில் நடந்த சம்பவத்துக்கு, எங்களை ஏன் துன்புறுத்தவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?,'' என்று இலங்கை நாட்டிலிருந்து வந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இலங்கை, புத்தளம் மாவட்ட,ம் சிலாவம் பகுதியைச் சேர்ந்த 184 பேர் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, கடந்த இரண்டாம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். இதையறிந்த பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை நாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டிமாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று காலை அவர்கள் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற போதும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர். இதனால், வேளாங்கண்ணியிலிருந்து, அதே வேன்களில், அவர்கள் நாடு திரும்ப, திருச்சி விமான நிலையம் புறப்பட்டனர். வரும் வழியில், திருவாரூர் பைபாஸ் ரோட்டில் அவர்களின் வேன் மீது செருப்பு வீசப்பட்டது. பின், திருச்சி மாவட்டம், காட்டூர் அருகே வந்த போது, அவர்களுடைய வேன்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். அதன் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இலங்கை நாட்டினர், திருச்சி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டனர்.
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து செலீன் என்ற பெண்மணி கூறும் போது, ""நாங்கள் என்ன பாவம் செய்தோம்?. எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அன்னையை கும்பிட குழந்தைகளுடன் வந்தோம். எதிர்ப்பால், மீண்டும் ஊர் திரும்புகிறோம். ஏன் எங்களை தாக்குகின்றனர். எங்கள் நாட்டில் நடந்ததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும். கடவுளை கும்பிட கூட அனுமதி மறுப்பது சரியில்லை,'' என்று கூறினார்.
இலங்கை நாட்டைச் சேர்ந்த ஜூட் என்பவர் கூறுகையில், ""அப்பாவிகளான எங்கள் மீது, தாக்குதல் நடத்துவது எந்த வகையில் சரி. குழந்தைகளும், பெரியவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், பத்து நாட்களுக்கு விசா இருந்தும், எங்களால் இங்கு தங்க முடியவில்லை. மாதாவை கூட தரிசிக்க முடியவில்லை, என்பது வருத்தமளிக்கிறது,'' என்று கூறினார்.
இலங்கையின் உளவுத்துறை அதிகாரி ரோஷன் கூறுகையில், ""சாமி கும்பிட வந்தவர்களை, இப்படி விரட்டி அடிப்பது சரியில்லை. இவர்கள், நாடு திரும்ப உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்றே (நேற்றே) அவர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவர்,'' என்று கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கை தமிழர்கள் தாங்கள் பாதிக்கபடும் போது மட்டும் தமிழக தாயகத்தை நினைபவர்கள் . தமிழகத்தில் இருக்கும் இந்த ஈழ தமிழர்கள் தமிழகத்தை கொஞ்சமேனும் நன்றியுடன் நினைத்துபார்ப்பது இல்லை என்பதே எனது சொந்த அனுபவம் . இவர்கள் நம்மை எதோ கொள்ளைகாரர்கள் போல நடத்துவதை நான் பார்த்திருக்கிறேன் . பல தமிழக மக்களின் நிலையை கண்டுகொள்ளாத இந்த அரசு இவர்களுக்கு பாதுகாப்பு மற்ற அத்யாவசிய வசதிகளை செய்து தந்தும் இவர்களில் பலர் தவறான வழியில் செல்வதையும் தமிழகத்தை இவர்களின் சட்டதுக்கு புறம்பான செயல்களுக்கு ஒரு இடமாக ஆக்கி இவர்களின் நடமாட்டத்தை நமது காவல்துறை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.