மும்பை : "தேர்தல் தோல்வியில் இருந்து சிவசேனா விரைவில் மீளும். மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைப் போம். தோல்வி அடையாமல், வெற்றியை பெற முடியாது. சிவசேனா தொண்டர்கள் தைரியம் நிறைந்தவர்கள். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும், அவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மராட்டிய மக்களை பற்றி நான் தவறாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மீடியாக்களால் வெளியிடப்பட்ட தவறான தகவல். நான் அவ்வாறு எதுவும் கூறவில்லை.
| வாசகர் கருத்து |
சொல்வதை சொல்லிவிட்டு,அப்படி சொல்லவில்லை என்ன சொல்வது அரசிவதிகளுக்கு ஒன்றும் புதியது இல்லை...பால் தாக்கரே மட்டும் என்ன விதிவிலக்கா..இனி சாதி மொழி கட்சி வராமல் காங்கிரசு தன் ஆட்சியை மக்கள் நன்மை அடையும் படி நகர்த்தனும். மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வெற்றி எதிர் கட்ட்சிகளின் பிரிவினை,பிரிவினை கொள்கை ,மற்றும் கூட்டணி எல்லாம் சேந்து தான்...........காங்கிரசுக்கு வெற்றி ..
|
by kalai raja,trichy,India 11/7/2009 2:02:20 AM IST |