புதுச்சேரி:லாஸ்பேட்டையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான குடியிருப்பு பூமி பூஜை நேற்று நடந்தது.லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி அருகே, 1 கோடியே 65 லட்சத்து 46 ஆயிரத்து 653 ரூபாய் மதிப்பீட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பங்கேற்று,
[...]
வில்லியனூர்:புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத் தலைவராக பாலமுருகன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.மங்கலம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழக தலைவராக நேற்று பொறுப்பேற்றுக்
[...]
காரைக்கால்:காரைக்காலில் சதம் அடித்த மூதாட்டி நேற்று தனது 101 பிறந்த நாளை கொண்டாடினார்.காரைக்கால் திருப்பட்டினம் மெயின்ரோட்டைச் சேர்ந்த சட்டையப்பர் மனைவி அஞ்சலை அம்மை, 101. இவரது கணவர் 1948ம் ஆண்டு இறந்தார். இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மகாதேவன் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.
[...]
காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நிருபமாராவ் சாமி தரினசம் செய்தார்.காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நேற்று காரைக்கால் வந்த
[...]
புதுச்சேரி::பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமி கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பாசிக் நிறுவனம், 1986ம் ஆண்டிலிருந்து லாபத்தில் இயங்கி வந்தது. லாபம்
[...]
புதுச்சேரி::தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாசிக் தினக்கூலி ஊழியர் நேற்று இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து, பாசிக் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வில்லியனூர் கணுவாப் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 44. அரசூரில் உள்ள
[...]
புதுச்சேரி,:"அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் மாணவர்கள் குறைந்து வருகின்றனர்' என, புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கூட்டமைப் பின் பொதுச்öŒயலாளர் லட்சுமணசாமி, தலைவர் விஜயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கல்வித் தரத்தை வலுப்படுத்த, ஆசிரியர்கள்
[...]
புதுச்சேரி:புதுச்சேரி மாநில நவீன அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் நேற்று ஆலைகளை மூடி, குடிமை பொருள் வழங்குதுறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடந்த காங்., ஆட்சியில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுத்து, ஒற்றை அவியல் அரிசி கொள்முதல்
[...]
புதுச்சேரி:என்.ஆர்.காங்., அரசின் ஓராண்டு நிறைவு விழா, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.புதுச்சேரியில் என்.ஆர். காங்., ஆட்சி அமைந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டு துவங்குகிறது. இதை முன்னிட்டு, எல்லப்பிள்ளைசாவடியில் உள்ள அக்கட்சியின் தலைமை
[...]
புதுச்சேரி:பால் வாங்க சென்ற பெண் குழந்தையைத் தாயின் கண்ணெதிரே மொபட்டில் கடத்தி, நகையைப் பறித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை அடுத்த குயவர்பாளையம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை, 40. சமையல் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா, 31. இவர்களுக்கு
[...]
புதுச்சேரி:லாரி உரிமையாளர்களுடன் போக்குவரத்து போலீசார் நேற்று ஆலோசனை நடத்தினர்.போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனலில் நடந்த இந்த கூட்டத்துக்கு போக்குவரத்து எஸ்.பி.,சிவதாசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், மனோகர், ராஜசங்கர் வெல்லட் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நகரப்பகுதிகளில்
[...]
புதுச்சேரி:சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவராக வையாபுரி மணிகண்டன், முதல்வர் முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வையாபுரி மணிகண்டனுக்கு, சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவியை வழங்க முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து
[...]
புதுச்சேரி:கனகசெட்டிக்குளம் இ.சி.ஆர்., பிம்ஸ் மருத்துவமனை சாலை சந்திப்பில் புதிததாகத் திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ, மாநிலச் செயலாளர் சாமிநாதன் கூறி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கனகசெட்டிக்குளம் எல் லைப்
[...]
புதுச்சேரி:புதுச்சேரி வானொலி நிலையம் சார்பில் நடத்தப்பட உள்ள இசைப் போட்டிக்கு, ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வானொலி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அகில இந்திய வானொலி நிலையம் சார்பில் இசைப்
[...]
புதுச்சேரி:சவரியம்மாள் கலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு தாள கருவிகள் குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.கொம்பாக்கம் பாலாஜி நகரில் நடந்த சிறப்பு வகுப்பில், பாரதியார் பல்கலைக்கூட மிருதங்க பேராசிரியர் கோபகுமார் மற்றும் அவரது மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.தாளத்திற்கு ஏற்ப
[...]
புதுச்சேரி:ஓட்டலில் மாமூல் கேட்டு தகராறு செய்த ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி மோகன் நகரில் வசிப்பவர் அனில்தாஸ், 30. இவர் காமராஜர் சாலையிலுள்ள ஓட்டலில் மேலாளராக உள்ளார். ஓட்டலுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், அனில்தாசிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஓட்டல்
[...]
புதுச்சேரி:ஆதிதிராவிடர் நலத்துறை பகுதிநேர ஊழியர்கள், தங்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தர்ணா நடத்தினர்.ஆதிதிராவிடர் நலத்துறையில் 115 ஊழியர்கள், கடந்த 5 ஆண்டுகளாக பகுதி நேர ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக வளாகத்தில்
[...]
புதுச்சேரி:முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தேர் உற்சவம் நேற்று நடந்தது.முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, 7ம் தேதி சம்வத்ஸராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் காலையில்
[...]
புதுச்சேரி,:புதுச்சேரி அரசு பணிக்கு, ராகேஷ் சந்திரா திரும்பினார்.புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, அவர் கோவாவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். கோவா அரசு பணியில் சேர்ந்தார். அவரது உடல்நிலையை கருத்தில்
[...]
காரைக்கால்:காரைக்கால் திருப்பட்டினம் ஆயிரம் காளி யம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.காரைக்கால் திருப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காளியம்மன் பூஜை விழா நடக்கும். அப்போது, அம்மன் பெட்டியிலிருந்து
[...]