Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »டீ கடை பெஞ்ச்
டீ கடை பெஞ்சு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மே 24,2013,00:00 IST

ஜூன் 5ல் மாற்றம் ஏற்படுத்த முடிவு!

""நேர்மையாவும், அறிவாளியாவும் இருக்கறதை விட, சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்கலேன்னா, அது, நேர்மறையாகுமா, எதிர்மறையாகுமா...'' என்றபடியே, நாயர் கடைக்கு வந்தார் அந்தோணிசாமி.

""என்ன ஓய்... தத்துவம் பேசிண்டு வர்றீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

""தத்துவம் இல்லீங்க... யதார்த்தத்தைச் சொல்றேன்... ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சமீபத்துல மாத்தினாங்க இல்லியா... அதுக்கான காரணத்தை தான் சொல்றேன்... ஹோம் செக்ரட்டரியா இருந்தவரு, எல்லார்ட்டயும், ரொம்ப, வீம்பு பேசிட்டாருன்னும், அதனால தான் மாத்தம் செஞ்சாங்கன்னும் தகவல்... ஐ.பி.எஸ்., பிரமோஷன் உட்பட, பல பைல்களை கிடப்புல போட்டுட்டாரு... போலீஸ் விவகாரத்துல தான் இப்படீன்னா, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும், ரொம்ப முறைச்சிக்கிட்டாரு... "எங்ககிட்டே, முகத்தைக் காட்ட, உங்களுக்கு யார் பவர் கொடுத்தது'ன்னு, மத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரில்லாம் சண்டை போடுற அளவுக்கு நிலைமை போயிடிச்சுன்னு சொல்றாங்க...

""இன்னொரு தகவல்... இப்ப, அவரை, ஹோம் செக்ரட்டரி பதவிலேர்ந்து மாத்திட்டு, சி.எம்., செக்ரட்டரியா போடப் போறதாவும் சொல்றாங்க... அதுக்கு தான், நேர்மறை, எதிர்மறைன்னெல்லாம் சொன்னேன்...'' எனக் கூறிச் சிரித்தார் அந்தோணிசாமி.

""கைதுக்கு பயந்து, லாட்டரி அதிபர், வெளிநாட்டுக்குப் பறந்துட்டாரு வே...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.

""போலீசுகாரங்க, இப்ப ஏதும் கேஸ் போட்டு, கைது செய்யத் தயாரானாங்களா என்ன...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

""இல்லே வே... ஏற்கனவே, சென்னைல, 6 கோடி ரூபாய் பறிமுதல்செஞ்ச விவகாரத்துல, கைதாயிடக் கூடாதுன்னு பயந்து, முன் ஜாமின் வாங்கினாரு... இப்ப, போலீசுகாரங்க அவரைத் தேடிட்டு இருக்காவ... இது தெரிஞ்சதும், தன்னைக் கைது செய்யக் கூடாதுங்கறதுக்காக, "கல்ப' நாட்டுக்கு, "கப்'புன்னு பறந்துட்டாரு... ஆனாலும், சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் போலீசுகாரவ, அவரைக் கண்காணிச்சிட்டு இருக்காவ...'' எனக் கூறி, எல்லாரையும் பெருமை பொங்கப் பார்த்தார் அண்ணாச்சி.

""சரி சரி... ரொம்ப பெருமை வேணாம்... சரியாத் தான் சொன்னீங்க இங்கிலீசு வார்த்தைங்களை...'' எனக் கிண்டலடித்தார் அந்தோணிசாமி.

""வர்ற, ஜூன் 5ம் தேதி, பிரச்னையை சுமுகமா முடிக்க, தலைவர் பிளான் போட்டிருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

""யாருக்கு, என்ன வே பிரச்னை...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""தி.மு.க.,வுல, அண்ணன் - தம்பி பிரச்னை, ஓடிண்டு இருக்கு இல்லையா... அதுக்கு, சுமுக தீர்வு வேணும்ன்னு, தலைவர் கருணாநிதி ஆசைப்படறார்... அதனால, வர்ற, ஜூன் 5ம் தேதி, ஒரு கூட்டத்தை, மதுரைல கூட்டி, அதுல, ரெண்டு பேரையும், ஒரே மேடைல உட்கார்த்தி வச்சு, அழகு பார்க்கப் போறார்... இதுக்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி, மதுரை நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கார்...

""அதனால, அதுக்கு முன்னாடி, இன்னிக்கு, தேர்தல் நிதி திரட்டுற கூட்டத்தையும், மதுரை, கேன்சல் பண்ணிட்டா... ஏன்னா, இந்தக் கூட்டத்துல, ரெண்டு கோஷ்டிக்கும் இடையில, ஏதாவது பிரச்னை உருவாகி, ரசாபாசம் ஆகிடக் கூடாது பாருங்கோ...'' எனக் கூறிநிறுத்தி, ""கிளம்பலாமா...'' என்றார் குப்பண்ணா.

எல்லாரும் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-மே-201306:55:20 IST Report Abuse
villupuram jeevithan தேர்தல் நிதி திரட்டுவதில் இருவருக்கும் போட்டி வைத்து தேர்ந்தெடுக்கலாமே? நிதியும் கிடைக்கும், ரசாபாசமும் இருக்காதே?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.