உலகின் மிக நீளமான தொங்கு பாலம், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சிசோய் என்ற இடத்தில், போக்குவரத்துக்காக சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு மலைத் தொடர்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், தரையிலிருந்து, 1,102 அடி உயரமுடையது. இதன் நீளம், 3,858 அடி. கடந்த 2007ல், இந்த பாலம் அமைக்கும் பணி துவங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.
மலைத் தொடர்களில் சாலை வழிப் பயணம் என்பது, மிகவும் சிரமமானதாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் இருப்பதால், அதை எளிதாக்கும் வகையில், இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு, தனித் தனி வழித் தடங்கள் உள்ளன. நான்கு வழிச் சாலை வசதியுடையதாக இந்த பாலம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், இந்த பாலத்தில் காரில் பயணிக்க முடியும். பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனியாக நடைபாதையும் உள்ளது. பாலம் முழுவதும், 1,888 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் மின் ஒளியில், இரவில் இந்த பாலத்தை பார்ப்பது, உலக அதிசயத்தை பார்ப்பது போன்ற பிரமிப்பை தரும்.
— ஜோல்னாபையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.