நம் நாட்டில், தலைவர்களின் பிறந்த நாளின்போது, சிறைக் கைதிகளுக்கான தண்டனையை குறைத்து, அவர்களை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. பிரேசிலில், கைதிகளின் தண்டனையை குறைப்பதற்கு, ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சாண்டா ரிடா டோ சபுகாய் என்ற நகரில் உள்ள சிறையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள், பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சைக்கிளில் உள்ள பெடல், தொடர்ந்து வேகமாக மிதிக்கப்படும்போது, சக்கரம் சுழன்று, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி பவரை, மின்சாரமாக மாற்றுவதற்கு, தனியாக கன்வெர்ட்டரும் உள்ளது.இந்த சிறையில், நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தினமும், இங்கு வந்து, சைக்கிள் மிதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தது எட்டு மணி நேரம், சைக்கிள் மிதித்தால், தண்டனை நாளில், ஒரு நாள் குறையும். இந்த வித்தியாசமான தண்டனை குறைப்பு நடைமுறை, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சம்பந்தபட்ட கைதிகள், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு வெளிநாட்டு உணவகத்திலும் இது போல சைக்கிள் உண்டு. அங்கு ஒரு மணி நேரம் பெடல் செய்தால் ஒரு சாப்பாடு இலவசம். (தினமலரில் தான் படித்த நினைவு)... இதை இங்கு எல்லா இடத்திலும் நிறுவலாம். இந்த சைக்கிள், பாட்டரி, இன்வேர்டார், செய்ய ஆகும் செலவை நாம் ஏற்றுகொண்டால் அதில் கிடைக்கும் மின்சாரம் நமக்கு மிச்சம் தானே. எல்லாரும் ஜிம் போவத்தர்க்கு பதிலாக அவங்க பிளாட்டுல நிறுவி விட்டால் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி, ஜிம் கட்டணம் மிச்சம், எலெக்ட்ரிசிட்டி லாபம். கூட்டி கழிச்சு பாருங்க சரியா வரும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.