Advertisement
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012,00:00 IST

காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்த நண்பர் எப்போதுமே, "டிப்ரஷன்' - "மன அழுத்தம்... மன அழுத்தம்' என்று கூறிக் கொண்டே இருப்பார். மகிழ்ச்சி என்பது துளிகூட கிடையாது அவரிடம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மன அழுத்தத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் போக்கிக் கொள்ள, போதையில் மூழ்கி விடுவார்.
இப்பிரச்னையிலிருந்து அவரை மீட்க முடிவு செய்து, நண்பரான மன நல மருத்துவர் ஒருவரை அணுகினேன்.
மருத்துவரிடம் விஷயத்தை கூறினேன். போலீஸ் அதிகாரியை அழைத்து வர நேரம் கொடுத்தார். பின் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, "நம்மில், யாருக்கு வருத்தம், கஷ்டம் இல்லை! நாம் அனைவருமே உழைப்பது, கஷ்டப்படுவது எதற்கு? நாமும், நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கத் தானே!' எனக் கேட்டார்.
பெரியதாக தலை ஆட்டினேன்.
அவரே தொடர்ந்தார்:
வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம். நாம் எப்படி இருக்கிறோமோ, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று, எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும். நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கை எவ்வளவு அரிய நல்ல விஷயம் என்று நாம் புரிந்து கொள்ள, நினைவுபடுத்திக் கொள்ள, 25 வழிகள் சொல்கிறேன், என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சொன்னார்...
* இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவ்'வாக இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே, செய்து விடுவர்; அவர்களிடம், "பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.
* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.
* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?
* சின்ன, சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். ஓவர் டேக் செ#ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து, அடுத்த ரயிலில் போகலாமே!
* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.
* புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.
* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.
* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் செ#யாத படுக்கை, இதேபோல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.
* "நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், "பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.
* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.
* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.
* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.
* நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.
* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.
* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.
* வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.
* நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.
* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!
* நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!
* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை.' வருபவர்
களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.
* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.
* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!
சிகிச்கை பெற்று வருகிறார் @பாலீஸ் அதிகாரி!
***

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (28)
muthu - covai  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-201211:51:31 IST Report Abuse
muthu gud....thank u anthumani sir...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரமணி - Singapore,இந்தியா
08-செப்-201208:31:50 IST Report Abuse
ரமணி நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள் நன்றி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raja - sloki,உகான்டா
08-செப்-201206:37:27 IST Report Abuse
Raja Arumaiyana karuthukkal
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ம Chidambaram - சென்னை,இந்தியா
07-செப்-201212:51:42 IST Report Abuse
ம Chidambaram நல்ல அருமையன கருத்துகள்.இவற்றை பின்பற்றினால் வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கணேஷ் - சென்னை,இந்தியா
06-செப்-201215:09:03 IST Report Abuse
கணேஷ் ரொம்ப அருமை அந்துமணி சார் , நல்ல கருத்து......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ர.ரெங்கன் - Chennai,இந்தியா
06-செப்-201210:20:37 IST Report Abuse
ர.ரெங்கன் பாசிடிவ் அப்ரோச் இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அரவிந்த். Manama - மனாமாBahrain,பஹ்ரைன்
04-செப்-201214:26:12 IST Report Abuse
அரவிந்த். Manama அருமை, லைப் ல இப்படிதான் இருக்க வேணும் என்று இல்லை, கிடைத்ததை வைத்து என்ஜாய் பண்ண ஐடியா கொடுத்ததிற்கு மிக்க நன்றி.வெரி குட் டிப்ஸ்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சு. செல்வராஜ் - Kolkata,இந்தியா
04-செப்-201214:12:34 IST Report Abuse
சு. செல்வராஜ் நல்ல டிப்ஸ் அந்துமணி சார் என்று எழுதலாம் என்று பார்த்தால் நிறைய பேர் அதை ஏற்கனவே எழுதிவிட்டார்கள். எனினும் மிக பயனுள்ள குறிப்புகளை தந்ததிற்கு நன்றிகள்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Amarnath - Doha,கத்தார்
04-செப்-201213:44:32 IST Report Abuse
Amarnath All what the doctor said is perfectly right. And thanks to Anthumani
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
babu - chennai,இந்தியா
04-செப்-201200:09:48 IST Report Abuse
 babu நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நானும் மன அழுத்தத்தால் பாதிக்க பட்டவன். குடித்தால் மட்டும் தான் நிம்மதி என்று நினைத்து வாழ்ந்து வந்தேன். வாழ்க்கையில் எவ்வளவு விசயத்தை மறந்து உள்ளேன் என்று எனக்கு காட்டியதுக்கு கோடான நன்றி. தொடரட்டும் உங்கள் பனி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.