Advertisement
"நான்' செத்த பிறகு வா!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : நவம்பர் 30,2012,00:00 IST

உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.
உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.
உடனே மன்னன், ""துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.
துறவி திரும்பாமல், ""போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது.
""துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், ""மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.
மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.
மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.
""துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.
""நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.
அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.
""நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
""நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.
தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .
***

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.