Advertisement
"எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012,00:00 IST

கணேசன், கோவை: குளிரில் வெளியே செல்லும்போது எனக்கு பல்வலி, கூச்சம் வருகிறது. சாதாரணமாக குளிர்காலத்தில் பல்வலி அதிகம் வருமா? இதை சமாளிக்க என்ன செய்வது?
நம் பற்களுக்கு இயற்கையாகவே, தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ளும் திறன் உள்ளது. நமது பற்கள், 70 டிகிரி சென்டிகிரேட் கொண்ட சூடான காபியையும், 1.5 டிகிரி சென்டிகிரேட் குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி கொண்டவை. குளிர் காற்றில் நிற்கும்போதோ, குளிரில் வெளியே செல்லும்போதோ, இந்த தட்பவெப்பம், மிகக்குறைந்த காலத்தில் மிகவேகமாக மாறும்.
அப்போது பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும். இவையே வலி மற்றும் கூச்சம் வர காரணம் ஆகும். இதை தடுக்க, அந்த விரிசல்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் "சீலன்டஸ்' எனப்படும் ஒரு வகை மருந்தை பூச வேண்டும். பல் டாக்டரின் ஆலோசனைப்படி சரியான இடைவெளியில் இதை செய்தால் நல்ல பலன் இருக்கும்.

சபரிநாதன், தூத்துக்குடி: ஒருநாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்? பற்களில் சொத்தை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் "பிரஷ்'ஷை மாற்ற வேண்டும்?
ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அவசியம் பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல் இருந்தால் நல்லது. பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும்.
ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்ய வேண்டும். 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். "புளூரைடு' உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது. பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை, 94441 54551

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.