விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!
கேட்டாளே ஒரு கேள்வி!
பக்தி என்பது என்ன?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
@குணாளன்,
முதலில் இவரது கடித்ததில் உள்ள ஆதிக்க மனப்பான்மையை எண்ணி வருந்துகிறேன். ஆஷaடபூதிகள் பெண்ணை மற்றவர் "விழுங்குவது போல" பார்த்தால் கோவம் வருகிறது என்று அந்த பெண்ணை என்னமோ (மணம் புரிந்து இருந்தாலும்) தன "பொருளாக" எண்ணும் தன்மை தெரிகிறது. அடுத்தவர் பேச்சை ஒட்டு கேட்கும் இவர், எந்த விதத்திதில் நல்லவர்? இவரின் வர்ணனைகள் ஏன் இவரின் (இவனின்?) மன விகாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்க கூடாது? அடுத்து, ஒரு பெண் மணமானவரோ, இளம் பெண்ணோ அழகாக தன்னை அலங்கரித்து கொண்டு ஏன் செல்கிறார், மற்றவரால் அவர் பாராட்டப்பட வேண்டும் என்ற ஒரு அடிப்படை நோக்கம் அங்கு உண்டு. அறிவியல் ரீதியாக எத்தனையோ காரணம் காட்டலாம். அதனை "அனுமதிக்கும்" ஆணும் - தான் ஒரு அழகியை மணந்து உள்ளேன் என்று பறைசாற்ற அப்படி செய்கிறான். இல்லை எனில் அந்த அலங்காரத்திற்கு "தேவை" என்ன? சரி, இவர் சொன்ன "அந்தரங்க விஷயங்களை" பரிமாறும் அந்த ஆடவர்களை பார்ப்போம். தான் இன்னாரை புணர்ந்தேன் என்று ம், அந்த பெண்ணை கரெக்ட் பண்ணி ஆகிவிட்டது என்றும், பல பெண்களை காதலிப்பதாக பெருமை கொள்ளும் வயதினர் அவர்கள். அவர்களுக்கு ஆதரவாக சொல்லவில்லை. அவர்கள் "தாழ்வு மனப்பான்மையில்" மிகைப்படுத்தி பேசுபவர்கள் போலும். காதலியை அவள் மேல் இருக்கும் காதலில் நண்பனுடன் விரக தாபத்தில் விவரிக்காத காதலன் இல்லையா என்ன? இலக்கியத்தில் இருக்கிறது, "அத்தான் என்ன அத்தான்" என்று திரைப்படங்களில் பாடலாக இருக்கிறது. அதனை பாராட்டுகிறோம். அதனை நிஜ வாழ்வில் பார்த்தால் தவறு என்கிறோம். அதனை நான் செய்வேனா என்று கேட்க முயல வேண்டாம். எல்லா இலக்கியங்களும் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ஏன் கண்டிக்க வேண்டும்? தன நண்பனின் மீது இருக்கும் அதீத நம்பிக்கை என ஏன் கொள்ள கூடாது? அந்த நம்பிக்கை தவறு என்று சொல்ல யாருக்கு உரிமை உண்டு? ஒருவருக்கும் இல்லை என்பது என அபிப்பிராயம். ஒட்டு கேட்டு அதனை பெருமையாக வெளியிட்ட இவரை கண்டிக்க வேண்டும்.
என்னே ஒரு தெளிவு... ஐயோ... எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல... முதலில் ஒரு அரசியல்வாதி போல் பேசுவதை நிறுத்தி விட்டு ஒரு சாதாரண குடிமகனாக பேசுவோம்... அரசியல்வாதிகள்தான் "நீ ஊழல் பெருச்சாளி" என்றால் "நீ என்ன யோக்கியனா" என்று ஒருவருக்கொருவர் கேட்பார்கள்.ஒரு திருவள்ளுவரல்ல ஆயிரம் திருவள்ளுவர்கள் வந்தாலும் உங்களின் நினைப்பையெல்லாம் திருத்த இயலாது. "அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை" விட்டு விட்டு குறை சொல்பவர்களை குறைசொல்லியே நமது வாழ்க்கையைக் கழித்துவிடுவோம். அப்படிப்பார்த்தால் யாரும் எங்கு குறைகள் நடந்தாலும் சுட்டிக்காட்டக் கூடாது - நீங்கள் உட்பட ..இரண்டாவது,.இலக்கியமோ சினிமாவோ , ஒரு நடைமுறை வாழ்க்கையில் இருந்து வெகுதூரம் என்பதை எல்லோரும் நன்றாக அறிந்ததனால்தான் யாரும் தேனிலவுக்கு மரத்தை சுற்றி பாட்டுப்பாடி ஆடுவதில்லை. இல்லை தேனிலவில் என்ன நடக்கிறது என்பதை "வீட்டுக்கு வீடு நடப்பதுதானே" என்று சினிமாவில் காண்பிப்பதில்லை.அதற்குப் பெயர் வேறாகிவிடும். குதர்க்கவாதங்கள்தான் பேசுவதென்றால் எதற்கு வேண்டுமானாலும் பேசலாம். நண்பனின் மீது அதீத நம்பிக்கையாம்..அந்தப் பெண் அந்த நண்பனின் தங்கையாக இருந்தால்???? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். இல்லை நண்பன் மீது அதீத நம்பிக்கை என்று ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரியின் அழகை நண்பனிடம் வர்ணிப்பாரா? மிகைப்படுத்திப் பேசுவது வேறு. ஒரு பெண்ணுடன் அறையில் நடந்த விஷயங்களை அவள் ஒரு விபச்சாரியாக இருந்தாலும் சபையில் விலாவாரியாக மைக் வைத்து கத்துவது வேறு.இந்த ஊரில் ஏன் நம்மூரிலும் விசில் ப்ளோயர்ஸ் என்று உண்டு. ஒரு இடத்தில் தவறுகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.அவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.இவர் ஒரு விசில் ப்ளோயர்.அவ்வளவுதான்.இவர் செய்தது தவறு, ஆனால் அது எந்த விதத்திலும் அந்த இளைஞர்களின் தவறை நியாயப்படுத்திவிடாது.ஒருவேளை அவர்கள் தாங்கள் செய்த ஒரு கொலையைப்பற்றி பேசிக்கொண்டிருந்திருந்து,இவரது தகவல் அவர்களை பிடிக்க உதவியிருந்தால். எப்படி பொய்மையும் வாய்மையிடத்தவோ, இங்கேயும் அப்படித்தான்....
அறிவு முதிர்ச்சி அடையாத பையனை திருமணம் செய்து வைத்தால் இப்படிதான் பேசுவான். இன்றெல்லாம் பொடிப்பசங்களிடம் கூட ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் கையில் காசு கிடைத்து விடும். உடனே திருமணம் செய்து வைத்து விடுவர் பெற்றோர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் சிந்திக்காத ஒருவரின் வாழ்க்கை எப்படி உருப்புடும்? சாதாரணமாக பேருந்து ரயில்களில் கூட அவர்கள் "அமைதியாக" பேசுவதை பார்த்திருக்கிறேன், அடுத்த அரைகிலோமீட்டருக்கு கேட்கும். இதிலிருந்தே அவர்களது ஒழுக்கம் தெரிந்துவிடும். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் இப்படிதான்.
வன்மம் வெளிப்படுகிறது இவரது பதிப்பில். பொடி பயல்கள், மன முதிர்வு இல்லாதவர்கள், ஏதேனும் ஒரு வகையில் பைசா கிடைத்துவிடும் என்று மட்டம் தட்டி, சிந்திக்காதவன், மனம் போல வாழ்க்கை என்று நிந்தனை வேறு. உங்கள் சிறு வயதில் நீங்கள் மிகைபடுத்தி பேசியது இல்லை போலும். அந்த அளவு தன்னம்பிக்கையுடன் இருந்தீர் போலும், ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த வயதில் சப்தம் போட்டு சிரிப்பதும், பேசுவதும் தவறானது அல்ல. அதற்க்கும் ஒழுக்கத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்கள் உங்கள் நியதிகளின் படி இல்லை என்றால் ஒழுக்கம் அற்றவர்கள என்ன? என்ன ஒரு அறிவு முதிர்ச்சி ungkaL பதிப்பில்....
எங்கள் வீட்டில் டிவி பார்க்க கடும் கட்டுப்பாடுகள் உண்டு. வேறு வேலைகள் எதுவும் இல்லாதபோது மட்டுமே அதுவும் மதியம் ஒருமுறை செய்திகளும் இரவு தூர்தர்ஷன் செய்திகளும் பாப்போம். எந்த சீரியலும் பார்ப்பதில்லை. உருப்படாத பட்டிமண்டப பேச்சுக்கள்,சினிமா, ஜோசியம் அதிர்ஷ்டகல்,ஜாக்பாட்,மானாட மயிராட போன்ற எதுவும் கிடையாது. எந்த கட்சியின் சானல்களும் பார்க்க மாட்டோம்.கிரிக்கெட் அறவே கிடையாது. டிஸ்கவரி நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட் போன்ற உபயோகமான சானல்கள் பாப்போம்.விஜய் TV நீயா நானா பார்ப்பதுண்டு. அதிகபக்ஷம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்.ஞாயிறு மட்டும் நான்குமணி நேரம். டிவி சிக்னல் வரவில்லை என்றால் கவலையே படமாட்டோம்.
அன்பர்களே, இதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளையும் காணலாம். டி.வி தணிக்கை என்பது ஒரு சிறுவனை, சிறுமியை தன வயது ஒத்த நண்பர்களிடம் இருந்து தனிமை படுத்தலாம். வாழ்க்கை என்பது வெறும் படிப்பு மட்டும் அல்ல, சமூகம் சார்ந்து வாழ்வது கூட. அன்று பலரும் மானாட மயிலாட பற்றி சிலாகித்து பேசினால் அதில் கலந்து கொள்ள முடியாமல் தனித்து இருந்தால் அந்த சிறாரின் / கல்லூரி மாணவரின் மனம் எப்படி இருக்கும் என்று யோசிக்கவும். பல நேரங்களில் பெற்றொருக்கு தெரியாமல் peer pressure ல் பல காரியங்களை செய்ய தூண்டும். அதற்காக ஒரேடியாக டி.வி யே கதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையம், செல் போன், கேபிள் என்று பல திசை திருப்பும் கருவிகள் இருக்கும் காலம் இது. அன்று போல ஒரு மர்பி ரேடியோவும், இலங்கை ஒலிபரப்பும் மட்டும் பொழுது போக்கு அல்ல. அவைகளை எப்படி கையாள வேண்டும் என்று அறிய வேண்டுமே அன்றி புறகணித்தல் உதவாது....
எஸ் ராமசாமி அவர்களே, ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். நாரதர் விஷ்ணுவிடம் சென்று "பரந்தாமனே, உன் பக்தர்களில் தலை சிறந்தவன் நான்தானே " என்று பாராட்டுக்காக வேண்டி கேட்டாராம். விஷ்ணு - :இல்லை நாரதா, அதோ அந்த விவசாயியை பார். அவன்தான் என் தலை சிறந்த பக்தன்: என்றாராம். நாரதருக்கு கோவம் வந்தது. நொடிக்கு ஒரு முறை உங்கள் பெயரை சொல்லி எப்பொழுதும் உங்களையே போற்றும் என்னை விட அவன் எப்படி என்று கேட்டார். விஷ்ணு ஒன்றும் பேசாது, ஒரு கப் (Cup) பில் விளிம்பு வரை எண்ணெய் விட்டு - நாரதா, இந்த எண்ணெய் சிந்தாது இந்த கப்பை கையில் வைத்து கொண்டு உலகை மூன்று முறை வலம் வா என்றார். நாரதரும் அப்படியே செய்து விட்டு வந்தார். அப்படி வந்த நாரதரை அந்த விவசாயின் வீட்டிற்கு கூட்டி சென்று அவன் ஒரு நாள் வாழ்வை மறைந்திருந்து பார்த்தனர்.
காலை எழுந்ததும் மாடு கன்றுகளின் சப்தங்க்களிடையே, சிறார்களின் கூச்சலகளுக்கு இடையே, என்று ஆரம்பித்து எந்த ஒரு செயலை செய்ய துவங்கும் பொழுதும் - பரந்தாமா என்று விளித்து விட்டு காரியத்தை துவங்கினான். அன்றைய தின முடிவில் விஷ்ணு - நாரதா, அந்த விவசாயி எத்தனை முறை என்னை கூப்பிட்டான் - என் கேட்க, " ஒரு முப்பது நாற்பது முறை இருக்கும்" என்றார் நாரதர். விஷ்ணு - "நீ உலகை சுற்றி வருகையில் என்னை எத்தனை முறை கூப்பிட்டாய்? " நாரதர் - "நான் எண்ணெய் கப்பின் மீது கவனமாக இருந்ததால் நினைவில்லை" விஷ்ணு - " ஒரு முறை கூட இல்லை. அதனால் தான் இவன் என் தலையான பக்தன். குடும்ப சுமையை நாள் முழுக்க சுமந்த போதிலும் என்னை கூப்பிட மறக்காதவன். இவனை விட நீ எப்படி உயர்ந்தவன் ஆவாய்"
ஆக இந்த கதையில் இருந்து என்ன தெரிகிறது. அந்த காலை சப்தங்களிலும் அந்த பரந்தாமனை நினைக்க முற்படும், நினைப்பவனே உண்மையான பக்தன். சுற்று சூழல் எப்படி இருப்பினும். கடவுளை எண்ண அமைதியான இடம் தேவை என்ற நியதி இல்லை. அது டிவி சப்தத்திலும் காணலாம். பாரதி போல - காக்கை சிறகினிலும், கேட்கும் ஒலியில் கடவுளை தரிசிக்கலாம். அவர்களை குற்றம் சொல்லாதீர்கள். அது அவர்கள் முறை. உங்கள் தனிப்பட்ட முறையில் இறைவனை தேடுங்கள்....
பக்தி பாடல்கள கேட்பது நல்லதுதான் . ஆனால் அதிகாலையில் ஆண்டவரோடு அமைதியாக அவருடைய எல்லா ஆசிர்வதங்களுக்கும் நன்றி சொல்லி அவரை போற்றி அவரோடு சம்பாஷித்து அவரோடு ஆத்மார்த்தமாக இணைந்து இருப்பது நல்லது. அதிகாலை நேரம் ஆண்டவர் நம்மோடு உலாவுகிற நேரம். டிவியில் பக்தி பாடல்
போட்டு விட்டு பேப்பர் படித்துகொண்டு காபி சாப்பிட்டு கொண்டிருப்பதல்ல..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.