ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!
*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...
* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!
* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!
* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல்
மறையாதோ
புத்தாண்டே!
* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்
தானமாய் கிடைக்காதோ
புத்தாண்டே!
* தேசங்களுக்கிடையே
பிரிவினை
முட்கள் சிதைந்து
ஒற்றுமை பூக்கள்
மலராதோ
புத்தாண்டே!
* ஆட்சியும்
அதிகாரமும்
ஏழைகள்
ஏக்கம் தீர்க்காதோ
புத்தாண்டே!
* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!
— அதியமான், ஆதனூர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.