பிரபலமான ஆங்கில வாரப் பத்திரிகை, சமீபத்தில், "ஆசியாவை சேர்ந்த பெண்களில், மிகவும் கவர்ச்சிகரமானவர் யார்?' என்ற கேள்வியை முன் வைத்து, இணையதளம் மூலமாக, ஒரு ஆய்வை நடத்தியது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, அதிக ஓட்டுகளை பெற்று, முதலிடத்தை பிடித்தார். கடந்தாண்டு, முதலிடத்தை பிடித்திருந்த, கரீனா கபூரை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா, முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்.
பிரியங்காவுக்கு கடும் போட்டியை அளித்தது யார் தெரியுமா, இவரது சக நடிகை, கத்ரீனா கைப் தான். தனக்கு கிடைத்த பெருமை குறித்து, பிரியங்கா கூறுகையில்,"ஏற்கனவே, உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டபோது, எனக்கு எந்த அளவு, மகிழ்ச்சியாக இருந்ததோ, அதே அளவு மகிழ்ச்சி, தற்போதும் உள்ளது...' என்கிறார்.
இந்த ஆய்வின் போது, "பிரியங்காவிடம், உங்களை அதிகமாக கவர்ந்தது எது?' என்ற கேள்வியையும், ரசிகர்களிடம் கேட்டிருந்தது, அந்த பத்திரிகை. அதற்கு, பெரும்பாலான ரசிகர்கள், "பிரியங்காவின் உதடு தான், எங்களுக்கு மிகவும் பிடித்தது...' என, பதில் அளித்துள்ளனர்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.