கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தன் காலக்ஸி சாதனங்களை ஒருகோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் என்ன எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலை சாம்சங் இந்தியா வெளியிடவில்லை. காலக்ஸி ஒய், காலக்ஸி நோட் மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவை இந்த விற்பனையில் 50% பங்கினைக் கொண்டிருந்தன. மொத்தம் 13 மாடல்களை காலக்ஸி வரிசையில் சாம்சங் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.6,790 முதல் ரூ.39,990 வரையில் உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.