தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
* தைமகள் வருகிறாள்
தரணி மணக்க...
வாசல் தெளித்து
வழியெங்கும் கோலமிட்டு
பூக்களால் அலங்கரித்து
புதுமகளை வரவேற்போம்!
* புதுப்பானை வாங்கி
பொன் மஞ்சள் மாலைகட்டி
ஓலை நறுக்குகளால்
உலைப் பொங்கல் பொங்கட்டும்!
எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்
ஏகாந்தம் கொடுக்க
பச்சரிசி மணக்க
படைப்போம் பொங்கலினை!
* பால் பொங்கும் பரவசத்தில்
பூமி மகிழட்டும்...
செங்கரும்பு காய்கறிகள்
செவ்வாழை கனிகளுடன்
தலைவாழை இலை வைத்து
தை மகளை வரவேற்போம்!
* பொங்குக பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
எனும் வாழ்த்தொலி
எத்திசையும் ஒலிக்கட்டும்!
* உழவர் சிறக்கவும்
ஊர் மக்கள் மகிழவும்
தரணி மகிழ்விக்க
தை மகள் வருகிறாள்...
அத்தைமகளின் வரவு
அத்"தை' மகளின் வரவுபோல்
ஆனந்தத்தை
அள்ளி இறைக்கட்டும்!
* கரும்பின் சுவையும்
பொங்கலின் குழைவும்
மஞ்சள் மணமும்
மனித குலம் பெறட்டும்!
* ஏலம் முந்திரி
திராட்சை வெல்லம்
இவையெல்லாம் சேர்ந்து
இனிப்பை கூட்டல் போல்
மனிதர்கள் சேர்ந்து
மனிதத்தின் புகழ்கூட்ட
தை மகள் வருகிறாள்
தரணி மணக்க...
வரும் தை மகளை வணங்கி
தாய்போல் வரவேற்போம்!
— வளர்கவி, கோவை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.