பொங்கல் மணக்கப் புதுமஞ்சள் மணம்சிறக்க
எங்கள் தமிழரினம் எங்கும் உயர்ந்துநிற்க
கங்கையுடன் வைகை காவிரியை இணைத்துவைக்க
சங்கம் முழங்கத் தைமகளே நீவருக!
செந்நெல் விளைய செங்கதலி இஞ்சியுடன்
கன்னல் விளையக் கடலைக்கொடி விளைய
தென்னை விளையத் திராட்சைக்கனி விளைய
அன்னைத் தைமகளே அமுதே நீ வருக!
வாவியெல்லாம் செங்கமலம் வாய்திறந்து சிரித்திருக்க
பூவிரியும் இடமெல்லாம் பொன்வண்டு கவிஇசைக்க
நாவினிக்கப் பாவாணர் நற்றமிழில் வாழ்த்துரைக்கத்
தாவிவரும் திருவே தைமகளே நீவருக!
முன்பனிக் காலத்தை முடித்துவைக்கும் திருமகளே
பின்பனிக் காலத்தை பிறக்கவைக்கும் பெருமகளே
உன்னால் கழனியுடன் உழவர்களின் சிறப்பையெல்லாம்
தன்னால் அறியவைத்தாய் தைமகளே நீவருக!
எண்ணியவை எல்லாம் ஈடேற நாம்செய்த
புண்ணியங்க ளெல்லாம் பொழுதும் துணைக்குவர
கண்ணியம் தவறாமல் கடமைகள் ஆற்றிவர
தண்மை மிகுந்தவளே தைமகளே நீவருக!
எதிர்கால வாழ்க்கை இனிமை நிறைந்திருக்க
உதிர்காலம் கூட உள்ளத்தில் அமைதி தர
புதிரான உலகத்தில் புதுமைகள் பூத்துவர
சதிராடும் தைமகளே தமிழ்மகளே நீவருக!
- கவிஞர் முத்துலிங்கம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.