""சின்னச் சின்ன மூக்குத்தியாம்...
சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்...
கன்னிப் பெண்ணே... உன் ஒய்யாரம் கண்டு
கண்ணு சிமிட்டுற மூக்குத்தியாம்...'' என மூக்குத்தியின் பெருமையை, பாடல்கள் சொல்கின்றன.
வெறும் அலங்காரப் பொருளல்ல, மூக்குத்தி.
பெண்களின் உடலோடு, உணர்வோடு தொடர்புடையது. இந்தியப் பெண்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய அடையாளச் சின்னம். வடஇந்தியப் பெண்கள் மூக்கின் இடப்பக்கத்திலும், தமிழகத்துப் பெண்கள் வலபக்கத்திலும் மூக்குத்தி அணிவதுண்டு.
காலப்போக்கில், விருப்பப்பட்ட வகையில் வலதோ, இடதோ மூக்குத்தி அணிகின்றனர். தம்பதிகளாக நிற்கும் போது, மனைவியின் இடப்பாகமே கணவன் நிற்க வேண்டும். போட்டோ எடுக்கும் போதும், அப்படித் தான். இடதுபுறத்தில் மூக்குத்தி அணிந்தால், கணவனின் ஆயுள் அதிகரிக்குமாம். வயது வந்த பெண்கள் ஒற்றை மூக்குத்தி அணிந்தால் பெண்களின் மாதவிடாய் சீராகுமாம்.
திருமணத்திற்குப் பின், இருபக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது, கர்ப்பநாடியோடு தொடர்புடையதால், ஐந்து வயதுக்குள் இரட்டை மூக்குத்தி அணிந்தால், பிற்காலத்தில் சுகப்பிரசவம் நூறு சதவீதமாம். அதற்காக 20 வயதில் இரட்டை மூக்குத்தி அணிந்து, சுகப்பிரசவம் ஆகவில்லை என கூறக்கூடாது என்கின்றனர், மூக்குத்தி அணிந்த முதிய பெண்கள்.
மூக்குத்தி விரும்பிகளிடம் கேட்காமல், முடிவுக்கு வரலாமா?
கல்லூரி மாணவி காமாட்சி:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.