தந்தை பெரியாரிடம் ஒருவர், ""உங்கள் தலைமுடி வெள்ளையாக இருக்கிறது. தாடி மட்டும் கருப்பாக இருக்கிறதே! தாடிக்கு டை அடிக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு பெரியார், ""அதெல்லாம் இல்லை. தலைமுடி அண்ணன், மீசையும், தாடியும் தம்பிகள். அதனால்தான் தலைமுடி சீக்கிரம் நரைத்து விட்டது. தாடியும், மீசையும் நரைக்கவில்லை,'' என்றார்.
""அது எப்படி அண்ணன் தம்பிகள்... புரியவில்லையே?'' என்று அவர் கேட்டார்.
""பிறக்கும்போது கூடவே பிறக்குது தலைமுடி. மீசையும் தாடியும் பதினைந்து பதினாறு ஆண்டுகள் கழித்துதானே வருது. அதனால்தான் தலைமுடி அண்ணன்; மீசையும் தாடியும் தம்பிகள்,'' என்றார் தந்தைப் பெரியார்.
கேட்டவர் அசந்து போய் விட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.