சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்று. இதை இனிப்பு உணவு, கார உணவு என்று இரண்டிலுமே பயன்படுத்துவோம். இவ்வளவுதான் ஏலக்காய் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால், நமக்கு தெரியாத இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!
* வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு தலைசுற்றுவது, மயக்கம் வருவது போன்றவை ஏற்படும். அதற்கு அரை டம்ளர் தண்ணீரில், நான்கு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கி குடிக்கலாம்.
* வாய்வு பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காயை காய வைத்து, பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீரில், அரை ஸ்பூன் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிப்பது நல்லது.
* நாவில் வறட்சி, மார்பு சளி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஒன்று, இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும் நிவாரணம் கிடைக்கும். ஆனால், அடிக்கடி மெல்லக் கூடாது.
*குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்திக்கு, இரண்டு ஏலக்காயை பொடியாக்கி, தேனில் குழைத்து மூன்று வேளை நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.
* விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீரில், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, அதோடு கொஞ்சம் புதினா போட்டு, கொதிக்க வைத்து குடித்தால் போதும்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.