இரண்டு நண்பர்கள் ஒரு சமயம் ஓர் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவர்கள் இருவரும் மடையர்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லது எதைப் பற்றியும் சிரத்தையோ, அக்கறையோ இல்லாத உதவாக் கரைகள். அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. "ஆற்றில் இறங்கி அதைக் கடந்து செல்ல வேண்டுமே' என்று எண்ணி திகில் அடைந்தனர்.
ஒருவன் சொன்னான், ""ஆற்றில் இறங்குவது பெரிதல்ல... ஆனால், சமயம் பார்த்து இறங்க வேண்டும்!'' என்றான்.
""சமயம் பார்த்து என்றால்?'' கேள்வி கேட்டான் இரண்டாம் நண்பன். ""ஆறு தூங்கும் போது தான் கடந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆறு நம்மைப் பிடித்துத் தின்று விடும்!'' என்றான்.
""சரி!'' என்றான் மற்றவன்.
அவர்கள் அங்கேயே உட்கார்ந்து சமையல் செய்து சாப்பிட்டனர்.
""இப்போது அநேகமாக ஆறு தூங்கி இருக்கும்!'' என்று கூறினான் முதல் நண்பன்.
""சரி, சோதித்து விடலாம்,'' என்று இருவரும் முடிவு செய்தனர். இருவரும் கையில் கிடைத்த இரண்டு கட்டைகளுடன் ஆற்றருகே சென்றனர்.
முதலாவது நண்பன் கொண்டு வந்திருந்த கட்டை, அடுப்புக்காக வெட்டிப் போடப் பட்டிருந்த பச்சை விறகு. அதை நீரில் அழுத்தினான். சத்தம் இல்லை.
""ஆஹா... ஆறு தூங்கிவிட்டது!'' என்று அவன் துள்ளிக் குதித்தான். இரண்டாவது நண்பன் சொன்னான், ""எனக்கு நம்பிக்கை யில்லை. ஒருவேளை அது செய்வது பாசாங்காக இருந்தால்?''
""அதுவும் சரிதான்!'' என்றான் முதல் நண்பன்.
இரண்டாமவன் கொண்டு வந்திருந்தது அடுப்பில் எரிந்த கொள்ளிக்கட்டை. அவன் அதைத் தண்ணீரில் முக்கவே, சுரீர் என்ற சத்தம் கேட்டது.
""ஓஹோ, ஆறு விழித்துக் கொண்டே தூங்குவது போலப் பாசாங்கு செய்திருக் கிறதே... அதன் முதுகில் ஒரு சூடு போட்ட வுடன் வேஷத்தைக் கலைத்து, வேதனையால் கத்துகிறது,'' என்றான் இரண்டாவது நண்பன்.
அவர்கள் மீண்டும் வந்து கரையில் காத்திருக்க ஆரம்பித்தனர்.
இப்படிப்பட்ட அடி முட்டாள்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.