கவனமாய் இருப்போம்!
* வெளிச்சம் நிரம்பும்
வீட்டிலிருந்து
இருள் வெளியேறும்
என்பதைப் போல...
இட்டு நிரப்புவதில்
இருக்கிறது
இன்பத்தின் சூட்சுமம்!
* இதயத்தில்
அன்பு நிரம்ப
வன்மம் வெளியேறும்;
இரக்கம் நிரம்ப
கோபம் வெளியேறும்!
* பொறுமை நிரம்ப
பொல்லாங்கு வெளியேறும்;
பிறர் நலம் நிரம்ப
தன்னலம் வெளியேறும்!
* இன்மொழி நிரம்ப
வசைமொழி வெளியேறும்;
துணிவு நிரம்ப
அச்சம் வெளியேறும்!
* நேர்மை நிரம்ப
கயமை வெளியேறும்;
திருப்தி நிரம்ப
பொறாமை வெளியேறும்!
* முயற்சி நிரம்ப
தடைகளும் வெளியேறும்;
தோழமை நிரம்ப
பகைமை வெளியேறும்!
* வெளியேற்றப்பட
வேண்டியதை
கணக்கில் எடுத்து,
இட்டு நிரப்புவதில்
கவனமாய் இருப்போம்
இன்று முதல்...
நம் உள்ளத்தில் தொடங்கி
உலகம் முழுவதும்!
— கீர்த்தி, கொளத்தூர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.