* பூமிக்கு ஒரு சூரியன் இருப்பது போல, கடவுளும் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சூரியனின் பிம்பம் தண்ணீரில் எல்லாம் பிரதிபலித்து பல சூரியன்களாகத் தெரிவது போல,ஒரு கடவுளே உலக உயிர்கள் அனைத்துமாக பிரதி பலித்துக் கொண்டிருக்கிறார்.
* மனிதன் மனம், வாக்கு, காயத்தின் (உடல்) கூட்டாக இருக்கிறான். மனதால் பகவானை நினைக்கவும், வாக்கால் அவன் திருநாமத்தை ஜெபிக்கவும், உடலால் அவன் திருவடிகளை வணங்கவும் வேண்டும்.
* எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்க ஒரே வழி தான் உண்டு. உண்மையாக இருக்கும் ஒருவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது தான். அந்த ஒருவன் கடவுள் மட்டும் தான்.
* சத்தியம், தரும சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம்ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. அப்போது நம்மிடம் தைரியம் குடி கொண்டிருக்கும்.
* ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. எளிமையையும், தூய்மையையுமே இறைவன் எதிர்பார்க்கிறார். காய்ந்த துளசியும், வில்வபத்திரமும் இருந்தால் கூட போதும்.
* அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இவை இரண்டும் மனதில் நிலைத்திருக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.