சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு "சப்தா' என்று பெயர். சப்தா என்றால் "ஏழு'. ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. ராசி விட்டு ராசி சஞ்சாரம் செய்வதே சூரியனின் தொழில்.இதனால் ஆற்றலுடன் ஓடும் சுபாவம் கொண்ட குதிரையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டியே, சூரியனுக்குரிய நித்ய கர்மாக்களை (தினமும் நடக்க வேண்டிய பணிகள்) வகுத்துக் கொடுப்பவர். இன்றைய நடைமுறையில் சொல்வதானால் சூரியதேவனின் "பெர்சனல் அசிஸ்டன்ட்'. பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார். சூரியபுராணத்தில் இந்தத் தகவல் உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.