பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
"ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய். இருநாளைக் கோலன்றால் ஏகாய்... என்னாளும் இடும்பை கூர் என் உயிரே! சீ... சீ... உன்னோடு வாழ்தல் அரிது...' என்றார் அவ்வையார். வாழ்தல் அரிது என்றாலும், வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளதே!ஒவ்வொரு வேளையிலும், "கொண்டா, கொண்டா' என்கிறது வயிறு. ஒரு கல்யாணத்துக்குப் போகிறான். முகூர்த்தம் பத்து மணிக்கு என்றால், ஏழு மணிக்கே இட்லி, காபி, வடை என்று ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
மே 15 - தத்தாத்ரேயர் ஜெயந்தி!ஒருவரை விட ஒருவர் அழகு, குணம், படிப்பு, பணம், பண்பு என மேலிட்டிருப்பது உலகத்தின் இயல்பு. ஆனால், தன்னை விட அழகானவர்களையோ, பண்பாளர்களையோ பார்த்து பொறாமை கொள்வது தவறு. ஒருவரை பார்த்து, அவரைப் போல் தன் அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ளலாமே தவிர, பொறாமை கொள்ளக் கூடாது என்பதை, அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா மூலம், உலகுக்கு உணர ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
கூட்டம் வேண்டாமே!நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில், பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தனர். அந்த சம்பிரதாய நிகழ்ச்சியில், பெண்ணின் குடும்பத்திலிருந்து நெருங்கிய உறவினர் உட்பட, மொத்தம் ஐந்து பேர்தான் இருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வீட்டிலிருந்து, 15க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகியிருந்தனர். அதில், மூன்று வயதுக்குட்பட்ட இரண்டு ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
பூமிப்பந்தின் இயற்கை சங்கிலியை, தன் விருப்பம் போல இழுத்து வளைக்கும் மோசமான மனிதர்களால், மாசுபடாத மலைதான் கொல்லிமலை.கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக் காத, சுத்தமான காற்று, கற்கண்டு போல தண்ணீர், கண்கொள்ளா பசுமை, உடலுக்கும், மனதிற்கும் இதம் தரும் குளிர்ச்சி, மூலிகை சுவாசம், கபடமில்லாத மக்களை கொண்டுள்ளது கொல்லிமலை.நாமக்கல் மாவட்டதில், கிழக்குத் தொடர்ச்சி மலையில், ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
அது ஒரு சனிக்கிழமை மாலை!நானும், லென்ஸ் மாமாவும் மட்டும்தான்! மற்ற பெரிசுகள் யாரும் கிடையாது...பெசன்ட் நகர் பீச்சில், அவரது வண்டியில் அமர்ந்திருந்தோம்...சனிக்கிழமையாதலால் எக்கச்சக்கமான, "கலர்...' சைட் அடித்துக் கொண்டிருந்தார் மாமா...பாட்டுக் கேட்க எண்ணிய நான், வண்டியின், டேஷ் போர்டை குடைந்தேன். ஸ்வீடிஷ் குரூப் அபாவின் கேசட் கிடைத்தது... அதைச் சுழல விட்டேன்!காதலி ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
* கா.பொன் பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர்: வெளியிடங்களில் மதிக்கப்படும் அளவு, வீட்டிலும் இன்றைய பெண்கள் மதிக்கப்படுகின்றனரா?இல்லை! 99 சதவீதம் மதிக்கப்படுவதில்லை. எனக்கு தெரிந்த பெண்மணி, "ஆர்க்கிடெக்ட்'- கட்டடங்கள் வடிவமைப்பதில் நிபுணி! அனைவராலும் புகழப்படுகிறார். தரைத் துடைக்கும் துணியை விட கேவல மாகவே, கணவரால், வீட்டாரால் நடத்தப் படுகிறார். ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
நகரமும் இல்லாத, கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின், சின்ன சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்கிறார் பெரியவர் ஒருவர்.அவரது சட்டையின் பின் பகுதியில், எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய, அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர், நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே, என்ன கேட்கிறோம் என்பதை புரிந்து, பதில் ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
இலங்கை பிரச்னையில் "மிதிவெடி!'ஈழத்தில், சிங்கள ராணுவமும், விடுதலைப்புலிகளும் புதைத்து வைத்திருக்கும் கண்ணி வெடிகளை அகற்ற, குறைந்த பட்சம், இன்னும் பதினைந்து ஆண்டு களாவது ஆகும். இதை மையப்படுத்தி தற்போது, "மிதிவெடி' என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது. பாலாஜி டேனியேல், நீலிமாராணி நடிக்கும் இப்படத்தை, புலம்பெயர்ந்த தமிழரான, மயூர் ஸ்ரீநிவாஸ் ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
""எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... வா தீபிகா... வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல... வெல்கம்.''""சாரி அசோக்... இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளும் தான்.திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
வெளிநாடுகளில், குறிப்பாய் மேற்கத்திய நாடுகளில், பொது இடங்களில் யார் என்ன செய்கின்றனர், எங்கே போகின்றனர், வருகின்றனர் என்பது பற்றி யாரும் கவனிப்பதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை. அவரவர்களின் காரியங்களை பார்த்தபடி போய்க்கொண்டே இருப்பர்.அந்த கலாசாரமும், இங்கிதமும் நமக்குப் போதாது என்பதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது, அங்கு நான், பார்த்த காட்சி ஒன்று! விமானத்திற்காக ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
"கடந்த 1937ல், ராஜாஜி அமைச்சரவை ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கோதை நாயகியை, சினிமா சென்சார் போர்டுக்கு உறுப்பினராக நியமித்தனர்.முதல் படத்தை பார்த்து விட்டு, கடுமையாக ஆட்சேபித்தார். காரணம், அப்படத்தில் ஆரம்பக் கட்டத்தில் காந்தி, தேசிய இயக்கம் முதலிய சில காட்சிகளுக்கு பிறகு கொலை, கொள்ளை, கற்பழித்தல் ஆகிய சம்பவங்களைக் கொண்டே, முழு படமும் தயாரிக்கப்பட்டிருந்தது ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
""லதா எழுந்திரு... எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே... இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,'' என்றான் சந்திரன்.""என்னை சற்று சும்மா இருக்க விடுங்கள். போகிப் பண்டிகை யாருக்கு... எனக்கு இல்லை. என் அண்ணாவின் உயிரைப் பறித்த நாளில்லையா அது... இனி யார் வந்து எனக்குப் பொங்கல் சீர் வைக்கப் போறாங்க... எந்த சகோதரனுக்காக, நான் கனுப்பிடி வைக்கப் ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
நான், நானாக இல்லை!* நாளைக்கெனமிச்சம் மீதி வைக்காமல்இன்றே செலவு செய்துதீர்க்கிறேன்...சேமிப்பில் இருக்கும் செய்திகளைஉன்னிடம் பேசும் போதுஒரு ஊதாரியைப் போல!* நமக்கு நடுவே ஏற்படும்சிறு சிறு பிரிவு இடைவெளிகளைபார்க்கிறேன்...மலைப்பிரதேச பயணங்களின் போதுதென்படும்பள்ளத்தாக்குகளைப் போல!* காற்றில் அசைந்து வந்துஎன் மீது உன் ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
நாய், பூனை ஆகியவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நடைமுறை, மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாமல், நம் நாட்டிலும் அதிகரித்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கென, தனியாக தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவை உள்ளன. ஜப்பானிலும், இதுபோன்ற விநோதமான கலாசாரம் உருவாகியுள்ளது. ஆனால், அங்கு நாய், பூனை ஆகியவற்றுக்கு பதிலாக, ஆடுகளை ..
பதிவு செய்த நாள் : மே 13,2012 IST
..