Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » வாரமலர் ( From ஜூலை 25,2010 To ஜூலை 31,2010 )
 
 
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
சென்னையில் ஒரு கல்யாண மண்டபம் —கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லாரும் உறவுக்காரர்கள் மட்டுமல்ல, ஒரே குடும்பத்தைத் சேர்ந்தவர்கள்.ஆம்... 102 வயது கோகிலாம்பாள் பாட்டிக்கு ஏழு மகள்கள், மூன்று மகன்கள் மற்றும் இவர்களின் மூலமாக பிறந்த 48 பேரன்கள், பேத்திகள். இவர்கள் தவிர, கொள்ளுப் பேரன், பேத்திகள் மற்றும் எள்ளு பேரன், பேத்திகள் என, ஐந்து தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
நாம் விரும்பியது கிடைத்தால் சந்தோஷம்; எதையாவது இழந்தால் துக்கம். வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி; யாராவது இறந்து விட்டால் துக்கம். இதெல்லாம் எத்தனை நாளைக்கு? காலத்தால் மறக்கக் கூடியவை தான்.  "உறவினரின் மரணத்துக்காக அழாதே; கடவுளின் தரிசனத்துக்காக அழு...' என்றனர். கடவுளின் தரிசனம் கவலையைப் போக்கி, கண்ணீரைத் துடைப்பதுடன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
மனைவி என்ற ஸ்தானம், தியாகத்தின் அடையாளம். பெருமையுடைய இந்த உறவுக்கு, துரோகம் செய்யும் ஆண்கள் பூமியில் இருக்கின்றனர். இவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக, சங்கரன்கோவில் எனும் திருத்தலத்தில் வழிபட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேளுங்கள். இங்குள்ள சங்கரநாராயண சுவாமி கோவில், ஆடித்தபசு விழாவுக்கு பிரபலமானது. சிவபெருமானையும், நாராயணனையும் ஒரே வடிவில் தரிசிக்க வேண்டுமென ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
மாநில அரசின் முக்கியத் துறை ஒன்றில் பணியாற்றும் அந்த அன்பர், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, தம் டூ–வீலரில் வீட்டை நோக்கிச் சென்று இருந்திருக்கிறார்.வழியில் போலீஸ் செக்கிங்... "ஐயா... வாயை ஊதுங்க...' எனக் கூறி, "பிரெத் அனலைசரை' வாயின் முன் நீட்டி இருக்கிறார் ஒரு போலீஸ்காரர். அன்பர், "பூ... பூ...' என லேசாக ஊதி இருக்கிறார்... வேகமாக ஊதினால், காட்டிக் கொடுத்து விடுமோ என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
** எல்.ரமணி, சென்னை: இன்றைய பெண்கள் எப்படி இருந்தால், ஆண்களுக்கு பிடிக்கும்?அழகாக, சரியான அளவுகளுடன், "ஷேப்பாக' சராசரி உயரத்துடன் இருப்பதை விரும்புகின்றனர். இத்துடன் மனைவியாக வருபவள் என்றால், எதிர்க்கக் கூடாது, வாயாடக் கூடாது, அடக்கம் வேண்டும், ஆடைகளால் போர்த்திக் கொள்ள வேண்டும். நகரத்தில் என்றால், பெண்ணும் சம்பாதிக்க வேண்டும். **** எம்.ராமதாஸ், தேனி: மன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
* காரணம் புரிந்தது! - பரிசு ரூ.1500என் கணவர் எப்போது வெளியூர் சென்றாலும், உணவு விடுதியுடன் கூடிய ஓட்டலில் தான் தங்குவார். சாதாரண ஓட்டல்களை விட, உணவு விடுதியுடன் கூடிய ஓட்டல்களில் கட்டணம் கொஞ்சம் அதிகம். அதற்காக, பலமுறை நான் அவரை கடிந்து கொண்டதுண்டு. சமீபத்தில், அவருடன் ஆந்திராவுக்குச் செல்ல நேர்ந்தது. தெலுங்கானா போராட்டம் காரணமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
முன்கதைச் சுருக்கம்!கதாநாயகன் யாத்ராவின் வீட்டுக்கு, நேசிகா மற்றும் அவளது சகோதரிகள் வந்தனர். அன்று முழுவதும் யாத்ராவின் வீட்டிலேயே தங்கப் போவதாகவும், மூவருமே யாத்ராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், யாத்ராவின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.பியூலாவை சந்திக்க அனிதா ரெட்டியுடன் சென்றான் யாத்ரா. அவளுக்கு டீச்சர் வேலை ஒன்று வாங்கிக் கொடுத்து, ஆசைதம்பியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
போதி தர்மரை சந்தித்த ஓர் அரசன், தன் கவலைகள் பற்றிக் கூறினான். "நாளை விடியற் காலை இங்கு வா! என் பிரம்போடு காத்திருக்கிறேன். உன் கவலைகளையும் கொண்டு வா! அவற்றை ஓட ஓட விரட்டுகிறேன்!' என்று போதி தர்மர் சொன்னார்; அரசன் குழம்பினான். அடுத்த நாள் காலை, தயங்கித் தயங்கி வந்தான். பிரம்பை நீவிக் கொண்டே போதி தர்மர், "எங்கே உன் கவலைகள்...' என்றார். "அவை பொருட்களல்ல, எனக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
* இளையராஜா பாடிய சித்தர் பாட்டு!"தாண்டவக்கோனே' படத்தில், ஆன்மிக சித்தர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடலின் சூழலை இளையராஜாவிடம் சொன்னதும், அதற்கான டியூனை உருவாக்கும் போதே, பாடலையும் எழுதி விட்டார். "காட்டுவழி துன்பம் இல்லே... கல்லு முள்ளு தொல்லையில்லே... சுமைகள் எல்லாம் சுமையே இல்லே... காலம் தோறும் பயமே இல்லே...' என்ற அந்த பாடலையும், தன் சொந்தக் குரலிலேயே உருக்கமாக பாடி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
திலகாவையும், பாரதியையும் பற்றித்தான் திரைப்பட உலகம் முழுவதும் அண்மைக் காலமாகப் பேச்சு. இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து, அவை வெற்றியும் பெற்றதிலிருந்து படத் தயாரிப்பாளர்கள், இருவரையும் வைத்துப் படங்களை எடுப்பதில் ஆர்வமாயினர்.காதல் தோல்வியுறுவதாய் காட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், இருவரும் உருகி உருகி நடித்திருந்தனர். "இருவரும் உண்மையாகவே காதலர்களாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
வணக்கம் அம்மா —நான் தற்சமயம் திருநெல்வேலியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். என் தந்தைக்கு 83 வயதாகிறது. எங்கள் பிரச்னையே, என் தந்தை, 24 மணி நேரமும் கடிகாரத்தையே பார்ப்பது தான். உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் கூட, அவருக்கு நேரத்திற்கு தான் செய்ய வேண்டும். அதனால், சமயத்தில் கழிப்பறைக்கு செல்வதற்குள்ளாகவே, உடையிலேயே சிறுநீர், மலம் போன்றவற்றை கழித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
* சின்னஞ் சிறுவிஷயத்தையெல்லாம்பெரிது படுத்துகிறாய்...* தாலி கட்டி விட்டால்அடிமையில்லைஎன்கிறாய்...* கூப்பாடு போட்டுஊரைக் கூட்டுகிறாய்...சமத்துவம்... சம உரிமைபெண்ணீயம் பேசுகிறாய்...* பட்டம் வாங்கியவள்...சட்டம் தெரியும்என்கிறாய்...* நினைத்தால்குடும்பத்தார்அனைவரையும்கம்பி எண்ணவைப்பேன் என்கிறாய்...* பெருமையாகத் தான்இருக்கிறது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
சோபாவில் சாய்ந்தபடி மிகப்பெரிய பிளாஸ்மா, "டிவி'யில் ஆங்கில நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனா, எதையோ நினைத்துக் கொண்டவளாய், "விருட்'டெனத் திரும்பினாள்.""அம்மா... தாத்தா எங்கே?''""கொஞ்சம் வெளிய போயிருக்கார் கண்ணு; இப்ப வந்துடுவார்...'' என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.கையில் காகிதக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2010 IST
(1). கறுப்பு, மஞ்சள் டாக்சிக்கு, "டாட்டா!'டாக்சி என்றாலே கீழே கறுப்பு, மேலே மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட அம்பாசி டர் கார்கள் தான் நினைவுக்கு வரும். எல்லா நகரங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வரும் இந்த டாக்சிகளுக்கு, ஒரேயடியாக மூடு விழா நடத்த, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.டில்லியில் கறுப்பு, மஞ்சள் டாக்சிகள் ஏராளமாக ஓடுகின்றன. விமான நிலையம், ரயில் நிலையங்களில் இவற்றை ..