இதுவரை: இசைக்கருவிகள் விற்கும் கடையில வேலைக்குச் சேர்ந்தாள் வனிதா. இனி-வனிதா அவரை திருப்திப்படுத்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே கடந்த இரண்டு நாட்களாக, அவர் கடையில், தான் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி இசைக்கருவிகளைப் பார்வையாக அடுக்க வேண்டும் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவள்தான் அவள். ஆகவே, வேகமாகக் காரியத்தில் இறங்கினாள். தாறுமாறாக ..
வெகு காலத்திற்கு முன் பெருங்கடல் ஒன்றை ஆட்சி செய்தான் ஒரு அரசன். அவன் பேராற்றல் வாய்ந்தவனாக விளங்கினான்.அவனுக்கு சுறா என்ற மகள் இருந்தாள். பேரழகியாகவும், நற்பண்புகள் நிறைந்தவளாகவும் அவள் விளங்கினாள்.அரசவைக்கு வந்த தன் மகளிடம், ""உனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறேன். உனக்கு யாரைப் பிடிக்கிறது சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றான்.தலை கவிழ்ந்த அவள், ..
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலாம் காலம்!அப்துல் கலாம் கூறியது:""வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் தெரியுமா?அறிவுபூர்வமான சமுதாயம் அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உயர் கல்வி கற்றவராக, சர்வதேச கல்வி தரமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தற்போது உள்ள கல்வி ..
முன்னொரு காலத்தில் செம்பருத்தி என்ற நாட்டை சிவந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். சுவையான கதைகளைக் கேட்பதில், மிகுந்த விருப்பம் கொண்டிருந்தான் அவன்."நிறைய கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்; யாருக்கும் பரிசு தரக் கூடாது. பரிசு தராததற்காக யாரும் தன்னைக் குறை சொல்லக் கூடாது. அதற்கு என்ன செய்வது?' என சிந்தித்தான்.சூழ்ச்சி நிறைந்த அவனுக்கு நல்ல வழி ஒன்று தோன்றியது.முரசு ..
செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.""அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' ..
மனித மூளை லட்சக்கணக்கான மெல்லிய நரம்பு செல்களால் உருவானது. மூளையைச் சுற்றியுள்ள செரிப்ரோ ஸ்பைனல் திரவத்தினுள் மூளை பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த செரிப்ரல் திரவம் அதிர்வுகளைத் தாங்கும் உபகரணமாகவும், நம் உடல்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.தலையில் அடி விழும்போது செரிப்ரல் திரவத்தைத் தாண்டி மூளையில் அதிர்வுகள் ஏற்பட்டால் உடலின் ..
ஒரு அரசாங்கத்தின் அலுவலகங்களைக் கொண்ட மிகப்பரந்த அளவில் உருவாக்கப்பட்ட கட்டடம் பெண்டகனாகத்தான் இருக்கும். பெண்டகன் என்பது ஐந்து பக்கங்களையுடைய ஓர் அமைப்பைக் குறிக்கும். அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அலுவலகங்களை கொண்ட வாஷிங்டனில் உள்ள கட்டடம் ஐந்து பக்கங்களுடைய அமைப்பு. ஆகவே, அதற்குப் பெண்டகன் என்றே பெயரிட்டுள்ளனர்.இக்கட்டடத்துக்கு 1943ம் ஆண்டு ஜனவரி ..
ஒருநாள் ஒட்டக்கூத்தரும், கம்பரும் ஆற்றங்கரை ஒன்றின் படித்துறையில், கொஞ்சம் தள்ளித் தள்ளி நின்று, கால், முகம் கழுவிக் கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீர், ஒட்டக்கூத்தர் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, கம்பர் நின்று கொண்டிருந்த இடம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தது.இதைக் கண்ட ஒட்டக்கூத்தர், சற்று குறும்பாக "கம்பரே, நான் கழுவின கழுநீர் தான் உனக்கு வருகிறது ..
பொதுவாக, நிலத்திலுள்ள நீரில் கரைந்த அயனிகள் அதிகம் உள்ளன. ஆனால், மழை நீர் இயற்கையிலேயே ஆவியாகி குளிர்ந்து வடிகட்டப்பட்ட நீராகவே கிடைக்கிறது. எனவே, மழைநீரில் மிகக் குறைந்த அளவே தனிமங்கள் உள்ளன. அதாவது ஒரு லிட்டருக்கு 10 முதல் 20 மி.கி., அளவே தனிமங்கள் உள்ளன. அயனிகளைப் பொறுத்தவரை லிட்டருக்கு 1 முதல் 3 மி.கி., அளவே உள்ளன.மழைநீரின் PH அளவு 6.7 முதல் 7.2 வரை உள்ளது. எனவே, குடிப்பதற்கு ..