கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உழவர் சந்தை உதவாத சந்தையாக மாறி, பொதுமக்கள் மற் றும் நுகர்வோருக்கு ஏமாற் றத்தை அளித்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரியில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. உழவர் சந்தைக்கு விளை பொருட் களை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மொத்தமாக வாங்கினர். இதனால் காய்கறி வரத்து இல்லாமல் உழவர் சந்தை முடங்கியது.கலெக்டர் நடவடிக்கையால், கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது முறையாக உழவர் சந்தை திறக்கப்பட்டது. அரசு விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, கடைகள் ஒதுக்கீடு செய்ததது. இதுவும் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கள் ளக்குறிச்சி உழவர் சந்தை மீண்டும் செயல்படாமல், உதவாத சந்தையாக காட்சி அளித்து வருகிறது. கலெக்டர் தலையிட்டு கள்ளக்குறிச்சி உழவர் சந்தை தொடர்ந்து செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
| வாசகர் கருத்து |